தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3073

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் தமக்கிடையே வியாபாரம் செய்துகொள்ளும்போது, இருவரும் பிரியாமல் ஒரே இடத்தில் இருக்கும்வரை,அல்லது இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியாபாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளிக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) அவர்களில் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியாபாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளித்து, அதன் பேரில் இருவரும் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டால், உடனே வியாபாரம் ஏற்பட்டுவிடும். அவ்வாறே, வியாபார ஒப்பந்தம் ஆன பிறகு,இருவரில் யாரும் வியாபார (ஒப்பந்த)த்தைக் கைவிடாமல் பிரிந்துவிட்டாலும் வியாபாரம் ஏற்பட்டுவிடும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 21

(முஸ்லிம்: 3073)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

«إِذَا تَبَايَعَ الرَّجُلَانِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، وَكَانَا جَمِيعًا، أَوْ يُخَيِّرُ أَحَدُهُمَا الْآخَرَ، فَإِنْ خَيَّرَ أَحَدُهُمَا الْآخَرَ فَتَبَايَعَا عَلَى ذَلِكِ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ، وَإِنْ تَفَرَّقَا بَعْدَ أَنْ تَبَايَعَا وَلَمْ يَتْرُكْ وَاحِدٌ مِنْهُمَا الْبَيْعَ، فَقَدْ وَجَبَ الْبَيْعُ»


Tamil-3073
Shamila-1531
JawamiulKalim-2830




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.