தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3198

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேட்டை நாயையும் ஆடுகள் மற்றும் கால்நடைகளைக் காவல் காக்கும் காவல் நாயையும் தவிர மற்ற நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்” என்றார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், “விவசாயப் பண்ணைகளைப் பாதுகாக்கும் நாய்களையும் தவிர” என்று கூறிவருகிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பண்ணை நிலம் இருக்கிறது (எனவே, அதைப் பற்றி அவர் நன்கறிவார்)” என்று கூறினார்கள்.

Book : 22

(முஸ்லிம்: 3198)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ

«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، إِلَّا كَلْبَ صَيْدٍ، أَوْ كَلْبَ غَنَمٍ، أَوْ مَاشِيَةٍ»، فَقِيلَ لِابْنِ عُمَرَ: إِنَّ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: «أَوْ كَلْبَ زَرْعٍ»، فَقَالَ ابْنُ عُمَرَ: «إِنَّ لِأَبِي هُرَيْرَةَ زَرْعًا»


Tamil-3198
Shamila-1571
JawamiulKalim-2945




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.