தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3324

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (பஷீர் பின் சஅத் – ரலி)) அவர்கள் (சிறுவனாக இருந்த) எனக்கு ஓர் அடிமையை (அன்பளிப்பாக) வழங்கியிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், “இது என்ன அடிமை?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “என் தந்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்) “இவருடைய சகோதரர்கள் அனைவருக்கும் இவருக்கு வழங்கியதைப் போன்று வழங்கினீரா?” என்று கேட்டார்கள். என் தந்தை “இல்லை” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் “அவ்வாறாயின், அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!” என்று கூறினார்கள்.

Book : 24

(முஸ்லிம்: 3324)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ

حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ بَشِيرٍ، قَالَ: وَقَدْ أَعْطَاهُ أَبُوهُ غُلَامًا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا هَذَا الْغُلَامُ؟» قَالَ: أَعْطَانِيهِ أَبِي، قَالَ: «فَكُلَّ إِخْوَتِهِ أَعْطَيْتَهُ كَمَا أَعْطَيْتَ هَذَا؟» قَالَ: لَا، قَالَ: «فَرُدَّهُ»


Tamil-3324
Shamila-1623
JawamiulKalim-3062




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.