தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-374

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் இருந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “இன்றிரவு நட்சத்திரம் விழுந்ததைக் கண்டவர் உங்களில் யார்?” என்று கேட்டார்கள். நான், “நான் (கண்டேன்)” என்று பதிலளித்தேன். பிறகு, “(நான் தொழுகையில் ஈடுபட்டிருந்ததால் அப்போது விழித்திருந்தேன் என எண்ணிவிடாதீர்கள். ஏனெனில், அப்போது நான் எந்தத் தொழுகையிலும் இருக்கவில்லை. மாறாக, என்னை விஷ ஜந்து தீண்டிவிட்டது

(அதனால் விழித்திருந்தபோதுதான் நட்சத்திரம் விழுந்ததைப் பார்த்தேன்)” என்று கூறினேன். “(விஷக்கடிக்காக) நீங்கள் என்ன செய்தீர்கள்” என்று சயீத் கேட்டார்கள். நான், “ஓதிப்பார்த்துக் கொண்டேன்” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “ஏன் அவ்வாறு செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்த ஒரு நபிமொழிதான் (அதற்குக் காரணம்)” என்று கூறினேன். அவர்கள் “ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் உங்களுக்கு என்ன அறிவித்தார்கள்?” என்று கேட்க, நான், “புரைதா பின் ஹுஸைப் அல் அஸ்லமீ (ரலி) அவர்களிடமிருந்து “கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது என்று ஆமிர் அஷ்அஷபீ (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்” என்று பதிலளித்தேன். அதற்கு சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “யார் தாம் செவியுற்றபடி செயல்பட்டாரோ அவர் நன்மையே செய்தார். ஆயினும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பின்வருமாறு) எமக்கு அறிவித்தார்கள் என்றார்கள்:

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

(மிஹ்ராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதரை நான் கண்டேன். அவருடன் (அவருடைய சமுதாயத்தாரில் பத்துக்கும் குறைந்த) ஒரு சிறு குழுவினரே இருந்தனர். மற்றோர் இறைத்தூதருடன் ஓரிரு நபர்களே இருந்தனர். இன்னோர் இறைத்தூதருடன் ஒருவர்கூட இருக்கவில்லை. பின்னர் எனக்கு ஒரு பெருங்கூட்டம் காட்டப்பட்டது. அவர்கள் என் சமுதாயத்தார்தாம் என்று நான் எண்ணினேன். ஆனால், இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்தான்; அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறே நான் பார்த்தேன். அங்கு ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் “மற்றோர் அடிவானத்தைப் பாருங்கள்” என்றும் என்னிடம் கூறப்பட்டது. பார்த்தேன்; அங்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் இருந்தது. அப்போது “இதுதான் உங்கள் சமுதாயம். எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை விளக்காமலேயே) நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்து சென்று தமது வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். எனவே, விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்வோர் யார் என்பது தொடர்பாக மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். சிலர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றவர்களே அவர்களாக இருக்கலாம்” என்று கூறினர்.

வேறு சிலர், “இஸ்லாத்தில் பிறந்து, இறைவனுக்கு இணைவைக்காமல் இருந்தவர்களே அவர்களாக இருக்கலாம்” என்றும், இன்னும் பலவற்றையும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “எது குறித்து நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது, மக்கள் (நடந்த விவாதங்களைத்) தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் தாங்களும் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; ஓதிப்பார்க்குமாறு பிறரிடம் கோரவுமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம் இறைவனையே முழுமையாகச் சார்ந்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நீரும் ஒருவர்தாம்” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் எழுந்து, “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.

Book : 1

(முஸ்லிம்: 374)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: كُنْتُ عِنْدَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، فَقَالَ

أَيُّكُمْ رَأَى الْكَوْكَبَ الَّذِي انْقَضَّ الْبَارِحَةَ؟ قُلْتُ: أَنَا، ثُمَّ قُلْتُ: أَمَا إِنِّي لَمْ أَكُنْ فِي صَلَاةٍ، وَلَكِنِّي لُدِغْتُ، قَالَ: فَمَاذَا صَنَعْتَ؟ قُلْتُ: اسْتَرْقَيْتُ، قَالَ: فَمَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟ قُلْتُ: حَدِيثٌ حَدَّثَنَاهُ الشَّعْبِيُّ فَقَالَ: وَمَا حَدَّثَكُمُ الشَّعْبِيُّ؟ قُلْتُ: حَدَّثَنَا عَنْ بُرَيْدَةَ بْنِ حُصَيْبٍ الْأَسْلَمِيِّ، أَنَّهُ قَالَ: لَا رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ، أَوْ حُمَةٍ، فَقَالَ: قَدْ أَحْسَنَ مَنِ انْتَهَى إِلَى مَا سَمِعَ، وَلَكِنْ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ، فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ الرُّهَيْطُ، وَالنَّبِيَّ وَمَعَهُ الرَّجُلُ وَالرَّجُلَانِ، وَالنَّبِيَّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، إِذْ رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ، فَظَنَنْتُ أَنَّهُمْ أُمَّتِي، فَقِيلَ لِي: هَذَا مُوسَى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَوْمُهُ، وَلَكِنْ انْظُرْ إِلَى الْأُفُقِ، فَنَظَرْتُ فَإِذَا سَوَادٌ عَظِيمٌ، فَقِيلَ لِي: انْظُرْ إِلَى الْأُفُقِ الْآخَرِ، فَإِذَا سَوَادٌ عَظِيمٌ، فَقِيلَ لِي: هَذِهِ أُمَّتُكَ وَمَعَهُمْ سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ “، ثُمَّ نَهَضَ فَدَخَلَ مَنْزِلَهُ فَخَاضَ النَّاسُ فِي أُولَئِكَ الَّذِينَ يَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ وَلَا عَذَابٍ، فَقَالَ بَعْضُهُمْ: فَلَعَلَّهُمُ الَّذِينَ صَحِبُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ بَعْضُهُمْ: فَلَعَلَّهُمُ الَّذِينَ وُلِدُوا فِي الْإِسْلَامِ وَلَمْ يُشْرِكُوا بِاللهِ، وَذَكَرُوا أَشْيَاءَ فَخَرَجَ عَلَيْهِمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا الَّذِي تَخُوضُونَ فِيهِ؟» فَأَخْبَرُوهُ، فَقَالَ: «هُمُ الَّذِينَ لَا يَرْقُونَ، وَلَا يَسْتَرْقُونَ، وَلَا يَتَطَيَّرُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ»، فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ، فَقَالَ: ” ادْعُ اللهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: «أَنْتَ مِنْهُمْ؟» ثُمَّ قَامَ رَجُلٌ آخَرُ، فَقَالَ: ادْعُ اللهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: «سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ»


Tamil-374
Shamila-220
JawamiulKalim-328




  • இந்தச்செய்தியில் இடம்பெறும் “(எந்த விசாரணையும் வேதனையுமின்றி சொர்க்கம் செல்லவுள்ள அவர்கள் யாரெனில்) அவர்கள் தாங்களும் ஓதிப்பார்க்கமாட்டார்கள்” என்பது ஷாத் ஆகும். காரணம் ஹுஷைம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலர் இந்த வார்த்தையைக் கூறவில்லை. ஸயீத் பின் மன்ஸூர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார். 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.