தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-780

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35

சுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல்.

 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்முஃமினூன்(எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈசா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும் (இந்த இடத்தில் அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் அன்னார் சொன்ன வார்த்தை குறித்து வேறுபடுகிறார்கள்.) நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்துவிட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்துகொண்டேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அத்தோடு நிறுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துவிட்டார்கள் என்று காணப்படுகிறது.

மேலும் இந்த அறிவிப்பில், (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களது பெயரில் இப்னுல் ஆஸ் என்பது இடம்பெறவில்லை. (ஆகவே, இந்த அப்துல்லாஹ் நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் அல்லர்.)

Book : 4

(முஸ்லிம்: 780)

35 – بَابُ الْقِرَاءَةِ فِي الصُّبْحِ

وَحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ ح، قَالَ: وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، يَقُولُ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ سُفْيَانَ، وَعَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ، وَعَبْدُ اللهِ بْنُ الْمُسَيِّبِ الْعَابِدِيُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ قَالَ

صَلَّى لَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الصُّبْحَ بِمَكَّةَ فَاسْتَفْتَحَ سُورَةَ الْمُؤْمِنِينَ حَتَّى جَاءَ ذِكْرُ مُوسَى، وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى – مُحَمَّدُ بْنُ عَبَّادٍ يَشُكُّ – أَوِ اخْتَلَفُوا عَلَيْهِ أَخَذَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ وَعَبْدُ اللهِ بْنُ السَّائِبِ، حَاضِرٌ ذَلِكَ وَفِي حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ فَحَذَفَ فَرَكَعَ وَفِي حَدِيثِهِ عَبْدُ اللهِ بْنُ عَمْرٍو وَلَمْ يَقُلِ ابْنَ الْعَاصِ


Tamil-780
Shamila-455
JawamiulKalim-698




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.