தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23845

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) யின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)

அறிவிப்பாளர் ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், தண்ணீர் பிடிக்கும் இடத்தைப்பற்றி யார் கூறியது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்.

(முஸ்னது அஹ்மத்: 23845)

حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ:

أَنَّ أُمَّهُ مَاتَتْ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» قَالَ: فَتِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ بِالْمَدِينَةِ ”

قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِقَتَادَةَ: مَنْ يَقُولُ تِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ قَالَ: الْحَسَنُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23845.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23213.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.