தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-358

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 80

உட்கார்ந்தவராக இமாம் தொழ வைப்பது

நபி(ஸல்) அவர்கள் குதிரையில் ஏறினார்கள். அவர்களை அது கீழே தள்ளி விட்டது. அதனால் அவர்களின் வலது புறத்தில் சிராய்ப்பு ஏற்பட்டது. நபி(ஸல்) அவாகள் உட்கார்ந்தவாறே தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாங்கள் உட்கார்ந்து தொழுதோம். தொழுகையை முடித்த போது, ”இமாம் என்பவர் அவரைப் பின்பற்றவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நின்று தொழ வைத்தால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள். அவர், ஸமியல்லாஹுலிமன் ஹமிதாஹ்”” என்று கூறினால், ”ரப்பனா வலக்கல் ஹம்து”” என்று நீங்கள் கூறுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் உட்கார்ந்து தொழுங்கள் என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 358)

80- بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جَالِسٌ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ، فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ، فَصَلَّى صَلَاةً مِنَ الصَّلَوَاتِ، وَهُوَ قَاعِدٌ. وَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا. فَلَمَّا انْصَرَفَ قَالَ: إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا. وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا قَالَ: ” سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، ” وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-358.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.