தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-6

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமை நாபிஉ  (ரஹ்) அறிவித்தார்.

என்னிடம் உங்களின் காரியங்களில் மிக முக்கியமானது, தொழுகை தான். ஒருவர் அதை (தானும்) பேணி, அதன் மீது (பிறரைப்) பேணச் செய்தால் தன் மார்க்கத்தை பேணியவராவார். ஒருவர் அதை பாழாக்கினால் அவர் அது அல்லாத மற்றவைகளை ரொம்ப பாழாக்கி விடுவார் என உமர்(ரலி) அவர்கள் தன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்கள்.

மேலும், நிழல் ஒரு முழம் சாய்ந்து விட்டால், உங்களில் ஒருவரது நிழல் அவரைப் போன்று ஆகும் வரை அஸர் தொழுங்கள். சூரியன் மறையும்முன் ஆறு மைலோ அல்லது ஒன்பது மைலோ எளிதான பயணம் செல்பவரின் கால அளவுக்கு வெள்ளையாக சூரியன் உயர்ந்த நிலையில் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், சூரியனின் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இரவின் மூன்றாவது பகுதி வரை இஷாவையும் (தொழுங்கள்). தூக்கம் வந்தால் (இஷாவை) தொழாமல் தூங்க வேண்டாம் என்று மூன்று முறை குறிப்பிட்டும், நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து தெளிவாக இருக்கும் நிலையில் சுப்ஹையும் (தொழுங்கள்) என்றும் (கடிதத்தில்) எழுதினார்கள்.

 

 

(முஅத்தா மாலிக்: 6)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى عُمَّالِهِ: ” إِنَّ أَهَمَّ أَمْرِكُمْ عِنْدِي الصَّلَاةُ. فَمَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا، حَفِظَ دِينَهُ. وَمَنْ ضَيَّعَهَا فَهُوَ لِمَا سِوَاهَا أَضْيَعُ،

ثُمَّ كَتَبَ: أَنْ صَلُّوا الظُّهْرَ، إِذَا كَانَ الْفَيْءُ ذِرَاعًا، إِلَى أَنْ يَكُونَ ظِلُّ أَحَدِكُمْ  مِثْلَهُ. وَالْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَدْرَ مَا يَسِيرُ الرَّاكِبُ فَرْسَخَيْنِ أَوْ ثَلَاثَةً، قَبْلَ غُرُوبِ الشَّمْسِ وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ. وَالْعِشَاءَ إِذَا غَابَ الشَّفَقُ إِلَى ثُلُثِ اللَّيْلِ. فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ. فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ فَمَنْ نَامَ فَلَا نَامَتْ عَيْنُهُ “. وَالصُّبْحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ


Muwatta-Malik-Tamil-6.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-6.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-6.




(இந்த நபிமொழியை அறிவிக்கும் நாபிஉ (ரஹ்) , உமர் (ரலி) அவர்களை சந்தித்தில்லை)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.