தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-7

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூ ஸுஹைல் தன் தந்தை கூறியதாகக் கூறுகிறார்கள்.

சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரையும், சூரியன் வெண்மையாகி, மஞ்சனிக்கும் முன் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும் தொழுது கொள்வீராக!

தூக்கம் வரும் வரை இஷாவை பிற்படுத்திச் செய். நெருக்கமாகவும், பிரகாசமாகவும் நட்சத்திரங்கள் உள்ள போது சுப்ஹைத் தொழு. குர்ஆனில் நீண்ட இரண்டு அத்தியாயங்களை, அதில் ஓது என அபூமூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் அபூ மூஸா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்:

“சூரியன் சாய்ந்ததும் லுஹர் தொழுகையை நிறைவேற்றுவீராக. அஸ்ர் தொழுகையை சூரியன் வெண்மையாகவும், தெளிவாகவும் இருக்கும்போதே நிறைவேற்றுவீராக, மஞ்சள் நிறம் அதற்குள் நுழையும் முன். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுகையை நிறைவேற்றுவீராக. இஷா தொழுகையை நீர் தூங்கும் வரை தாமதப்படுத்துவீராக. சுப்ஹு தொழுகையை நட்சத்திரங்கள் பிரகாசமாகவும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தும் இருக்கும்போதே நிறைவேற்றுவீராக. மேலும் அதில் முஃபஸ்ஸலின் இரண்டு நீண்ட சூராக்களை ஓதுவீராக.”

(முஅத்தா மாலிக்: 7)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلٍ، عَنْ أَبِيهِ

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَتَبَ إِلَى أَبِي مُوسَى: أَنْ «صَلِّ الظُّهْرَ، إِذَا زَاغَتِ الشَّمْسُ. وَالْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ، قَبْلَ أَنْ يَدْخُلَهَا صُفْرَةٌ. وَالْمَغْرِبَ إِذَا غَرَبَتِ الشَّمْسُ، وَأَخِّرِ الْعِشَاءَ مَا لَمْ تَنَمْ. وَصَلِّ الصُّبْحَ، وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ. وَاقْرَأْ فِيهَا بِسُورَتَيْنِ طَوِيلَتَيْنِ مِنَ الْمُفَصَّلِ»


Muwatta-Malik-Tamil-7.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-7.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-7.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

மாலிக்
அபூ ஸுஹைல்
அபூஸாலிஹ்


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.