தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-79

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 16

காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

தபூக் போர் சமயம் நபி (ஸல்) அவர்கள் தனது (மல ஜலம் கழிக்கும்) தேவைக்காக சென்றார்கள். நான் அவர்களுடன் தண்ணீர் எடுத்துச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்றினேன். தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு (கைகளை கழுவுவதற்காக) குளிர் ஆடையின் கைப்பகுதியிலிருந்து கைகளை வெளிப்படுத்த முயன்றார்கள். குளிர் ஆடை இறுக்கமாக இருந்ததால் இயலவில்லை. உடனே குளிர் ஆடையின் கீழ்ப்பகுதியில் இருந்து இரு கைகளையும் வெளியாக்கிக் கழுவினார்கள். தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். காலுறைகள் மீதும் மஸஹ் செய்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் மக்களுக்கு இகாமத் செய்து, ஒரு ரக்அத்தை முடித்து விட்டார். அவர்களுக்கு மீதம் இருந்த ஒரு ரக்அத்தை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். (நபி(ஸல்) அவர்களை முந்தி விட்டதன் காரணமாக மக்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், ”நீங்கள் நல்லது செய்தீர்கள்”” என்று கூறினார்கள் என முகீரா இப்னு ஷீஹ்பா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் உள்ளது)

(முஅத்தா மாலிக்: 79)

16- بَابُ مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عَبَّادِ بْنِ زِيَادٍ، مِنْ وَلَدِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِحَاجَتِهِ فِي غَزْوَةِ تَبُوكَ. قَالَ الْمُغِيرَةُ: فَذَهَبْتُ مَعَهُ بِمَاءٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَكَبْتُ عَلَيْهِ الْمَاءَ، فَغَسَلَ وَجْهَهُ. ثُمَّ ذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْ جُبَّتِهِ، فَلَمْ يَسْتَطِعْ مِنْ ضِيقِ كُمَّيِ الْجُبَّةِ، فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ. فَغَسَلَ يَدَيْهِ، وَمَسَحَ بِرَأْسِهِ، وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ. فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَؤُمُّهُمْ، وَقَدْ صَلَّى بِهِمْ رَكْعَةً، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَةَ، الَّتِي بَقِيَتْ عَلَيْهِمْ، فَفَزِعَ النَّاسُ. فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَحْسَنْتُمْ»


Muwatta-Malik-Tamil-70.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-79.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.