தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-5042

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூ பிஷ்ர் (ரஹ்) கூறியதாவது:

பத்து விஷயங்கள் நபிவழிகளில் அடங்கும். (அவையாவன:)

பல் துலக்குவது, மீசையைக் கத்தரிப்பது, வாய்கொப்புளித்தல், நாசிக்கு நீர் செலுத்துவது, தாடியை வளர்ப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது, (மல ஜலம் கழித்த பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது போன்றவைகளாகும் என தல்க் பின் ஹபீப் (ரஹ்) கூறினார்.

 

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை, தல்க் பின் ஹபீபிடமிருந்து அபூபிஷ்ர், ஸுலைமான் அத்தைமீ போன்றோர் முர்ஸலாக அறிவித்துள்ளார்கள். இதுதான் சரியானது. தல்க் பின் ஹபீபிடமிருந்து முஸ்அப் பின் ஷைபா மர்ஃபூவாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ளப்படாது. காரணம் அவர் (ஹதீஸ் கலையில்) நிராகரிக்கப்பட்டவர்.

(நஸாயி: 5042)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ قَالَ:

عَشْرَةٌ مِنَ السُّنَّةِ: السِّوَاكُ، وَقَصُّ الشَّارِبِ، وَالْمَضْمَضَةُ، وَالِاسْتِنْشَاقُ، وَتَوْفِيرُ اللِّحْيَةِ، وَقَصُّ الْأَظْفَارِ، وَنَتْفُ الْإِبْطِ، وَالْخِتَانُ، وَحَلْقُ الْعَانَةِ وَغَسْلُ الدُّبُرِ

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «وَحَدِيثُ سُلَيْمَانَ التَّيْمِيِّ وَجَعْفَرِ بْنِ إِيَاسٍ أَشْبَهُ بِالصَّوَابِ مِنْ حَدِيثِ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، وَمُصْعَبٌ مُنْكَرُ الْحَدِيثِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5042.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4982.




இது மக்தூஃவான செய்தியாகும்.

இந்த கருத்தில் வரும் மற்ற செய்திகளை பார்க்க : அஹ்மத்-25060 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.