தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-956

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிலிருந்து (ஹஜ்ஜுக்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினீர்கள்? என்று கேட்டார்கள்.
அதற்கு அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக (இஹ்ராம் கட்டி) தல்பியா கூறினார்களோ அதற்காக தான் நானும் தல்பியா கூறினேன் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்தால் நிச்சயமாக நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

(திர்மிதி: 956)
(109) باب

حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ، قَالَ سَمِعْتُ مَرْوَانَ الأَصْفَرَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ

أَنَّ عَلِيًّا، قَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ فَقَالَ ‏”‏ بِمَ أَهْلَلْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ ‏”‏ لَوْلاَ أَنَّ مَعِي هَدْيًا لأَحْلَلْتُ ‏”‏

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏


Tirmidhi-Tamil-879.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-956.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




இமாம் திர்மிதீ கூறுகிறார்கள்:

இந்த அறிவிப்பாளர் தொடருடன் கூடிய இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ் கரீப்” தரத்தில் அமைந்ததாகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.