Month: December 2020

Tirmidhi-2729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2729. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர்களிடையே இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.


قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: هَلْ كَانَتِ المُصَافَحَةُ فِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَعَمْ»


Abi-Yala-2871

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2871. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.


قُلْتُ لِأَنَسٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ


Ibn-Hibban-492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

492. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.

 


قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «نَعَمْ».

قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ


Musnad-Ahmad-22236

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22236. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூரணமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


«مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، أَوْ يَدِهِ، فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ؟ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمُ الْمُصَافَحَةُ


Tirmidhi-2730

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2730. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கை பிடிப்பதின் மூலமே வாழ்த்துச் சொல்வது பரிபூரணமாகின்றது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«مِنْ تَمَامِ التَّحِيَّةِ الأَخْذُ بِاليَدِ»


Muwatta-Malik-2641

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பளிப்பு செய்துக் கொள்ளுங்கள், நீங்கள் அன்பு கொள்வீர்கள், பொறாமை நீங்கி விடும்.

 


«تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ، وَتَهَادَوْا تَحَابُّوا، وَتَذْهَبِ الشَّحْنَاءُ»


Musnad-Ahmad-18548

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18548. நுபைஃ பின் ஹாரிஸ் கூறுகிறார் :

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு சலாம் சொல்லி எனது கையைப் பிடித்து என் முகத்தைப் பார்த்து சிரித்தார்கள். உங்களிடத்தில் நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் எனக்குத் தெரியாது. என்றாலும் நீங்கள் ஒரு நன்மைக்காகவே இதை செய்திருப்பீர்கள் என நான் கருதுகிறேன் என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது நான் உன்னிடத்தில் நடந்துகொண்டவாறு அவர்கள் என்னிடத்தில் நடந்துகொண்டார்கள். மேலும் (இது பற்றி நான் ஏன் இவ்வாறு செய்தேன் தெரியுமா?) என்று கேட்டார்கள். நான் நீங்கள் என்னிடத்தில் கூறியவாறே அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழருக்கு சலாம் கூறி அவருடைய கையைப் பிடித்தால் அல்லாஹ்விற்காகவே இவ்வாறு செய்தால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் அவ்விருவரும் பிரிந்து செல்வதில்லை என்று கூறினார்கள்.


لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، فَسَلَّمَ عَلَيَّ، وَأَخَذَ بِيَدِي، وَضَحِكَ فِي وَجْهِي، قَالَ: تَدْرِي لِمَ فَعَلْتُ هَذَا بِكَ؟ قَالَ: قُلْتُ: لَا أَدْرِي، وَلَكِنْ لَا أَرَاكَ فَعَلْتَهُ، إِلَّا لِخَيْرٍ، قَالَ: إِنَّهُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَعَلَ بِي مِثْلَ الَّذِي فَعَلْتُ بِكَ، فَسَأَلَنِي، فَقُلْتُ مِثْلَ الَّذِي قُلْتَ لِي، فَقَالَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ، فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، وَيَأْخُذُ بِيَدِهِ، لَا يَأْخُذُهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ فَيَتَفَرَّقَانِ حَتَّى يُغْفَرَ لَهُمَا»


Abu-Dawood-5211

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5211. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து அவ்விருவரும் மாண்பும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை போற்றி பாவமன்னிப்புத் தேடினால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


«إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا، وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ، وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا»


Tirmidhi-2727

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2727. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்துக் கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை…

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا»


Ibn-Majah-3716

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3716. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ، لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ، وَإِذَا صَافَحَهُ، لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا، وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ»


Next Page » « Previous Page