Month: May 2023

Kubra-Bayhaqi-17562

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17562. நபி (ஸல்) அவர்கள் (உம்மு அதிய்யா-ரலி அவர்களிடம்), “நீ (பெண்களுக்கு) விருத்தசேதனம் செய்யும்போது மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! ஏனெனில் இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


إِذَا خَفَضْتِ فَأَشِمِّي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ


Almujam-Alawsat-2253

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2253. நபி (ஸல்) அவர்கள் உம்மு அதிய்யா (ரலி) அவர்களிடம், “நீ (பெண்களுக்கு) விருத்தசேதனம் செய்யும்போது மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! ஏனெனில் இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُمِّ عَطِيَّةَ: «إِذَا خَفَضْتِ فَأَشِمِّي وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»


Kubra-Bayhaqi-17561

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17561. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அதிய்யாவே! மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; (அவளின்) திருமண வாழ்க்கைக்கும் நல்லது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூஸகரிய்யா-இப்னுமயீன் அவர்கள், இதில் இடம்பெறும் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் (நபித்தோழரான) ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ என்பவர் அல்ல என்று கூறியதாக ஃகலாபீ அவர்கள் கூறினார்.


كَانَ بِالْمَدِينَةِ امْرَأَةٌ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ تَخْفِضُ الْجَوَارِي، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أُمَّ عَطِيَّةَ اخْفِضِي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوَاجِ


Almujam-Alkabir-8137

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8137. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)


كَانَتْ بِالْمَدِينَةِ امْرَأَةٌ تَخْفِضُ النِّسَاءَ، يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْفِضِي، وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَنْضَرُ لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»


Shuabul-Iman-8279

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8279. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (ஒரு தடவை) அன்ஸாரி நபித்தோழியரிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம், “அன்ஸாரி பெண்களே! நீங்கள் உருவமில்லாத (வடிவத்தில்) மருதாணி வையுங்கள்;

(பெண்களுக்கு கத்னா எனும் விருத்தசேதனம் செய்யும்போது) மேலோட்டமாக நறுக்குங்கள்! ஒட்ட நறுக்கி விடாதீர்கள்! இதுவே உங்கள் கணவருக்கு பிடித்தமானது;

உபகாரம் செய்வோருக்கு நன்றிமறப்பதை விட்டு உங்களை எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:


دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نِسْوَةٍ مَنَ الْأَنْصَارِ، فَقَالَ: ” يَا نِسَاءَ الْأَنْصَارِ، اخْتَضِبْنَ عَمْسًا،

وَاخْتَفِضْنَ وَلَا تَنْهَكْنَ، فَإِنَّهُ أَحْظَى لِإِنَاثِكُنَّ عِنْدَ أَزْوَاجِهِنَّ، وَإِيَّاكُنَّ وَكُفْرَ الْمُنَعَّمِينَ


Almujam-Alkabir-1054

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் அறிவிப்புகள்:

1054. முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.

மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَقَالَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدَهَا يَدُ الرِّجَالِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، فَقَالَ: «مَا طَهَّرَ اللهُ كَفًّا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»


Almujam-Alawsat-1114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1114. முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.

மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَجَاءَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدِهَا يَدَ الرَّجُلِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ» ، فَقَالَ: «مَا طَهَّرَ اللَّهُ يَدًا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»


Tabaqatul-Kubra-Ibn-Sahd-11952

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11952. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيتُ رَسولَ الله صَلى الله عَلَيه وسَلم لأُبايِعَهُ فَقالَ: انطَلِقي فاختَضِبي ثُمَّ تَعالَي أُبايِعكِ.


Almujam-Alkabir-771

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

771. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ فَقَالَ: «انْطَلِقِي فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَى حَتَّى أُبَايِعَكِ»


Almujam-Alkabir-770

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

770. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ، فَقَالَ: «انْطَلِقِي فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَى حَتَّى أُبَايِعَكِ»


Next Page » « Previous Page