அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கருஞ்சீரக விதையில் (சாம் எனும்) மரணத்தைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறினார்கள்:
‘சாம்’ என்றால் ‘மரணம்’ என்று பொருள். ‘அல்ஹப்பத்துஸ் ஸவ்தா’ என்றால், (பாரசீகத்தில்) ‘ஷூனீஸ்’ (கருஞ்சீரகம்) என்று பொருள்.
அத்தியாயம்: 76
(புகாரி: 5688)حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، وَسَعِيدُ بْنُ المُسَيِّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُمَا: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«فِي الحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ، إِلَّا السَّامَ»
قَالَ ابْنُ شِهَابٍ: وَالسَّامُ المَوْتُ، وَالحَبَّةُ السَّوْدَاءُ: الشُّونِيزُ
Bukhari-Tamil-5688.
Bukhari-TamilMisc-5688.
Bukhari-Shamila-5688.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: புகாரி-5687.
கருஞ்சீரகத்தை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன❓
https://youtu.be/X4PWNJQ8LoY?si=NkMmOo12L75Owsv9
இந்த ஹதீஸிற்க்கு பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்து உள்ளது என்று அர்த்தம் வைத்தால் குழப்பம் வராது.
عائشة أم المؤمنين
أسامة بن شريك
بريدة بن الحصيب الأسلمي
عبدالله بن عمر
صهيب بن سنان الرومي
போன்ற ஐந்திற்க்கு மேற்பட்ட சங்கிலி தொடர் மூலம் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
இந்த சங்கி தொடர் எல்லா பொய்யது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
கர்ப்பபை பிரச்சினைக்கு நபி அவர்கள் மருந்து சொல்லும் போது கருஞ்சீரகத்தையும் சேர்த்து சொன்னதாக வரும் ஹதீஸ்:
ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் மகளுக்கு அல்உத்ரா (கருப்பை நோய்) உள்ளது” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ போய் குஸ்த் (ஒரு மருத்துவ மூலிகை), முர்ர் (ஒரு வகைப் பிசின்), எண்ணெய் மற்றும் கருஞ்சீரகம் எடுத்து, அவற்றைக் கொடு. பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை” என்று கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் தன் மகளுக்கு அந்த மருந்தைக் கொடுக்காமல், அதற்குப் பதிலாக ஒரு தாயத்தைக் கட்டினாள். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் மகள் இறந்துவிட்டாள். பின்னர் அந்தப் பெண் தன் மகளின் உடலை மூடி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறாக நடந்து கொண்டதால், என் மகளை இழந்ததைவிட இது மிகவும் கடுமையானது” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ ஒரு தாய், உன்மீது பாவமில்லை” என்று கூறினார்கள். அப்போது அங்கே பல பெண்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம், “பெண்களே! உங்கள் குழந்தைகளுக்குத் தாயத்துக் கட்டாதீர்கள். ஏனெனில், அது இரகசியமான கொலை” என்று கூறினார்கள்.
2562:علل ابن أبي حاتم
அல்ஹம்ந்த்லில்லாஹ். சிறப்பான விளக்கம்.