ஹதீஸின் தரம்: விபரம் கீழே
2914. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனுடன் (அதை உணர்ந்து) வாழ்ந்தவரிடம் (அவர் சொர்க்கத்திற்குச் செல்லும்போது) “ஓதுக; (சொர்க்கப் படிநிலைகளில்) உயருக; உலகில் நீர் நிறுத்தி நிதானமாக ஓதிக்கொண்டிருந்ததைப் போன்று (இங்கும்) ஓதுக! ஏனெனில், நீர் ஓதி முடிக்கும் இறுதி வசனத்திற்கு அருகில்தான் நீர் தங்கப் போகுமிடம் அமைந்துள்ளது” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
இந்தச் செய்தியை புன்தார்-முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> ஆஸிம் … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
يُقَالُ – يَعْنِي لِصَاحِبِ الْقُرْآنِ -: اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ
சமீப விமர்சனங்கள்