தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-3554

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அனைவருடைய அறிவிப்பிலும் ‘மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்(ய வேண்டும்)’ என இடம்பெறறுள்ளது. ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் ‘இரண்டு ஆண்டுக் காலத்திற்கு அல்லது மூன்று ஆண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம் பெற்றுள்ளது.

சுஃப்யான் பின் சயீத் (ரஹ்), ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்), ஹம்மாத் பின் சலமா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில், ‘பின்னர் யாரேனும் ஒருவர் (கண்டெடுக்கப்பட்ட) அப்பொருனின் எண்ணிக்கையையும் பையையும் அதன் முடிச்சையும் தெரிவித்து (உன்னிடம்) வந்தால் அதை அவரிடம் கொடுத்துவிட’ என்று இடம்பெற்றுள்ளது.

சுஃப்யான் பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து வகீஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் அறிவிக்கும் அறிவிப்பில் ‘(அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால்) அது உனது செல்வத்தின் வகையைப் போன்றதாகும்’ என்று இடம்பெற்றுள்ளது. சுஃப்யானிடமிருந்து முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் ‘இல்லையென்றால், அதை நீ பயன்படுத்திக்கொள்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

Book : 31

(முஸ்லிம்: 3554)

وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، جَمِيعًا عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ يَعْنِي ابْنَ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، ح وحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، كُلُّ هَؤُلَاءِ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، بِهَذَا الْإِسْنَادِ نَحْوَ حَدِيثِ شُعْبَةَ، وَفِي حَدِيثِهِمْ جَمِيعًا ثَلَاثَةَ أَحْوَالٍ، إِلَّا حَمَّادَ بْنَ سَلَمَةَ، فَإِنَّ فِي حَدِيثِهِ عَامَيْنِ أَوْ ثَلَاثَةً، وَفِي حَدِيثِ سُفْيَانَ، وَزَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، وَحَمَّادِ بْنِ سَلَمَةَ، «فَإِنْ جَاءَ أَحَدٌ يُخْبِرُكَ بِعَدَدِهَا وَوِعَائِهَا وَوِكَائِهَا، فَأَعْطِهَا إِيَّاهُ»، وَزَادَ سُفْيَانُ فِي رِوَايَةِ وَكِيعٍ: «وَإِلَّا فَهِيَ كَسَبِيلِ مَالِكَ»، وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ: «وَإِلَّا فَاسْتَمْتِعْ بِهَا»


Tamil-3554
Shamila-1723
JawamiulKalim-3257




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.