தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-714

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 இமாமுக்கு (தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா? 

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைந்து விட்டனவா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று துல்யதைன் கேட்டார். ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், ‘ஆம்’ என்றனர். உடன், மற்றும் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறி முன்பு செய்தது போன்று, அல்லது அதை விடவும் நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள்.
Book : 10

(புகாரி: 714)

بَابٌ: هَلْ يَأْخُذُ الإِمَامُ إِذَا شَكَّ بِقَوْلِ النَّاسِ؟

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَيُّوبَ بْنِ أَبِي تَمِيمَةَ السَّخْتِيَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ، أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.