தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-54

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேற்கண்ட ஹதீஸே அம்மார்பின் யாஸிர் (ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‎அதில் தாடியை வளர விடுதல் என்பதற்கு பதிலாக கத்னா செய்தல் என்ற வாசகமும், ‎தண்ணீரால் செய்தல் என்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்தல் என்று அறிவிக்கப் ‎பட்டுள்ளது.‎

மேற்கண்ட ஹதீஸ் போன்று இப்னு அப்பாஸ் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‎அதில் ஐந்து செயல்கள் குறிப்பிட்டு அவையனைத்தும் தலையைச் சார்ந்தவை எனவும் ‎குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தாடியை (வளர) விடுதல் என்பதை குறிப்பிட்டால். ‎தாடி முடியை வகிடு எடுத்து சீவுதல் குறிப்பிடப் பட்டுள்ளது என இமாம் அபூதாவூது ‎கூறுகின்றார்கள். ‎

மேலும் இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

அதாவது தல்க் பின் ஹபீப் முஜிரஹித் ஆகியோரிடமிருந்து பக்ர் பின் அப்துல்லாஹ் ‎அல் முஸ்னீ ஆகியோரிட மிருந்து ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ் போலவே வேறு ‎சிலராலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுவது பற்றி ‎கூறப்படவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அபூ ஸலமா ‎வாயிலாக அறிவிக்கும் ஹதீஸில் தாடியை விட்டு விடுதல் என்றுள்ளது. இப்றாஹீம் ‎அன்னகயீ என்பாரிடமிருந்து இதே போன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‎தாடியை விட்டு விடுதல் கத்னா செய்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன. ‎

குறிப்பு : இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் ‎இடம் பெறும் ஸலமா பின் முஹமது யாரென அறியப்படாதவர் என இப்னுல் கையும் ‎‎(ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இவர் தனது பாட்டனார் மூலம் அறிவிப்பவை முர்ஸலான ‎ஹதீஸாகும். அதாவது இவர் தனது பாட்டனாரைச் சந்திக்கவில்லை. இப்னு ‎ஹிப்பான் அவர்கள் இவரது ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனக் ‎குறிப்பிடுகிறார்கள்.‎

(அபூதாவூத்: 54)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، وَدَاوُدُ بْنُ شَبِيبٍ ، قَالَا : نَا حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ يَاسِرٍ ، قَالَ مُوسَى : عَنْ أَبِيهِ ، وَقَالَ دَاوُدُ : عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ مِنَ الْفِطْرَةِ الْمَضْمَضَةَ وَالِاسْتِنْشَاقَ . فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ ، وَزَادَ : وَالْخِتَانَ ، قَالَ : وَالِانْتِضَاحَ ، وَلَمْ يَذْكُرِ انْتِقَاصَ الْمَاءِ ، يَعْنِي الِاسْتِنْجَاءَ . 

قَالَ أَبُو دَاوُدَ : وَرُوِيَ نَحْوُهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ، وَقَالَ : خَمْسٌ كُلُّهَا فِي الرَّأْسِ ، وَذَكَرَ فِيهِ الْفَرْقَ وَلَمْ يَذْكُرْ إِعْفَاءَ اللِّحْيَةِ . 

قَالَ أَبُو دَاوُدَ :  وَرُوِيَ نَحْوُ حَدِيثِ حَمَّادٍ ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ ، وَمُجَاهِدٍ ، وَعَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ قَوْلُهُمْ ، وَلَمْ يَذْكُرُوا إِعْفَاءَ اللِّحْيَةِ . 

وَفِي حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي مَرْيَمَ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ : وَإِعْفَاءُ اللِّحْيَةِ ، وَعَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ نَحْوُهُ ، وَذَكَرَ إِعْفَاءَ اللِّحْيَةِ وَالْخِتَانَ .


AbuDawood-Tamil-54.
AbuDawood-Shamila-54.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.