தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1659

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 மாலிக் அறிவித்தார்.

முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸகஃபீ, அனஸ் இப்னு மாலிக்(ரலி) இருவரும் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் போகும்போது முஹம்மத் இப்னு அபீ பக்ர், அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நீங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய தினம் என்ன செய்தீர்கள்?’ எனக் கேட்டார்.

‘அன்று எங்களில் சிலர் தல்பியாக் கூறிக் கொண்டிருந்தனர்; நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுக்கவில்லை. இன்னும் சிலர் தக்பீர் கூறினார்கள்; அதையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை’ என அனஸ்(ரலி) கூறினார்.
Book :25

(புகாரி: 1659)

بَابُ التَّلْبِيَةِ وَالتَّكْبِيرِ إِذَا غَدَا مِنْ مِنًى إِلَى عَرَفَةَ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، أَنَّهُ

سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا اليَوْمِ، مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ يُهِلُّ مِنَّا المُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا المُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.