தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-528

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 180

இகாமத்தை செவியுறும் போது சொல்ல வேண்டிய பதில்.

பிலால் இகாமத் சொல்லத் துவங்கி கத் காமத்திஸ் ஸலாத் (தொழுகை துவங்கி விட்டது) என்று சொல்லும் போது அகாமஹல்லாஹு (அல்லாஹ் தொழுகையை என்றென்றும் நிலை நாட்டுவானாக!) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இகாமத்தின் மற்ற வார்த்தைகளுக்கு அதான் சம்பந்தமாக உமர் (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளது போலவே பதிலளித்தார்கள் என அபூ உமாமா (ரலி) அல்லது நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கின்றார்.

(அபூதாவூத்: 528)

180- بَابُ مَا يَقُولُ إِذَا سَمِعَ الْإِقَامَةَ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ، حَدَّثَنِي رَجُلٌ، مِنْ أَهْلِ الشَّامِ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، أَوْ عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّ بِلَالًا أَخَذَ فِي الْإِقَامَةِ، فَلَمَّا أَنْ قَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا» وَقَالَ: فِي سَائِرِ الْإِقَامَةِ كَنَحْوِ حَدِيثِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْأَذَانِ


AbuDawood-Tamil-528.
AbuDawood-Shamila-528.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.