பாடம்:
ஒருவர் தொடர்ந்து மது அருந்தினால் (என்ன தண்டனை?)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
(அபூதாவூத்: 4482)بَابٌ إِذَا تَتَابَعَ فِي شُرْبِ الْخَمْرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ ذَكْوَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا شَرِبُوا الْخَمْرَ فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاجْلِدُوهُمْ، ثُمَّ إِنْ شَرِبُوا فَاقْتُلُوهُمْ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3886.
Abu-Dawood-Shamila-4482.
Abu-Dawood-Alamiah-3886.
Abu-Dawood-JawamiulKalim-3888.
வேறு சில செய்திகளின் மூலம் கொலை செய்தல் என்ற சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று சிலர் கூறியுள்ளனர்.
அந்த செய்திகள் சரியானவை அல்ல என்றும், கொலை செய்தல் கட்டாய சட்டமல்ல; ஆட்சியாளரின் விருப்பத்தை பொருத்துள்ளது என்று வேறுசில ஹதீஸ்ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6780 ,
இது சரியான செய்தியா?
அஸ்ஸலாமு அலைக்கும். இந்தச் சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பிறகு மாற்றப்பட்டுவிட்டது என்று வேறு செய்திகளில் வந்துள்ளது. இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்து பதிவுசெய்கிறோம்.