தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2935

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘அஸ்ஸாமு அலைக்க’ (‘உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்’) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)’ என்று கேட்டார்கள்.

நான், ‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘நான் (அவர்களுக்கு பதிலளித்த போது) அவர்களிடம், ‘வ அலைக்கும் – (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)’ என்று கூறியதை நீ கேட்கவில்லையா?’ என்றார்கள்.
Book :56

(புகாரி: 2935)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ اليَهُودَ، دَخَلُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: السَّامُ عَلَيْكَ، فَلَعَنْتُهُمْ، فَقَالَ: «مَا لَكِ» قُلْتُ: أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوا؟ قَالَ: «فَلَمْ تَسْمَعِي مَا قُلْتُ وَعَلَيْكُمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.