தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-18509

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் – ரலி-) தம் வீட்டில் (திருக்குர்ஆனின்) ‘அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அருகில் கட்டப்பட்டிருந்தது. உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. அந்த மனிதர் பயந்து விட்டார்.

இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், ‘இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்’ என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) கூறினார்:

நான் பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம் அந்த மனிதரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்று கேட்டேன். அதற்கு பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் “ஆம்” என விடையளித்தார்கள்…

(முஸ்னது அஹ்மத்: 18509)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ:

قَرَأَ رَجُلٌ سُورَةَ الْكَهْفِ وَلَهُ دَابَّةٌ مَرْبُوطَةٌ، فَجَعَلَتِ الدَّابَّةُ تَنْفِرُ، فَنَظَرَ الرَّجُلُ إِلَى سَحَابَةٍ قَدْ غَشِيَتْهُ، أَوْ ضَبَابَةٍ، فَفَزِعَ، فَذَهَبَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: سَمَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاكَ الرَّجُلَ؟ قَالَ: نَعَمْ. فَقَالَ: «اقْرَأْ فُلَانُ، فَإِنَّ السَّكِينَةَ نَزَلَتْ لِلْقُرْآنِ، أَوْ عِنْدَ الْقُرْآنِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-18509.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-18137.




இந்த கருத்தில் வரும் செய்திகளை மேலும் பார்க்க : அஹ்மத்-18474 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.