தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3384

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (தம் மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம், ‘அபூ பக்ர், அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி சொல்’ என்று கூறினார்கள். நான், ‘அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள். நீங்கள் தொழுகைக்காக நிற்குமிடத்தில் அவர்கள் நிற்க நேரும்போது மனம் நெகிழ்ந்து போய் (அழுது) விடுவார்கள்’ என்று சொன்னேன்.

அவர்கள் முன்பு சொன்னது போன்றே மீண்டும் கூறினார்கள். நானும் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன்.

அறிவிப்பாளர் ஷுஉபா(ரஹ்) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் மூன்றாவது முறையில்… அல்லது நான்காவது முறையில்… ‘(பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகிற)வர்கள், அபூ பக்கருக்கு சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3384)

حَدَّثَنَا بَدَلُ بْنُ المُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَهَا: «مُرِي أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ»، قَالَتْ: إِنَّهُ رَجُلٌ أَسِيفٌ، مَتَى يَقُمْ مَقَامَكَ رَقَّ. فَعَادَ فَعَادَتْ. قَالَ شُعْبَةُ فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.