தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3411

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் ஃபிர் அவ்னுடைய மனைவியை இறை நம்பிக்கையாளார்களுக்கான உதாரணமாகக் கூறுகிறான். ஒரு முறை அவர், என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக் கொடுப்பாயாக! ஃபிர் அவ்னிடமிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப் பாற்றுவாயாக! என்று அவர் பிரார்த்தித்தார்.

மேலும், இம்ரானின் மகள் மர்யமை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக் காட்டு கிறான். அவர் தம் வெட்கத் தலத்தைப் பாதுகாத்துக் கொண்டார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ஆவியை அவருக்குள் ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் ஒருவராயும் இருந்தார். (66:11, 12)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் ‘ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.’
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3411)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى {وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَةَ فِرْعَوْنَ} [التحريم: 11]- إِلَى قَوْلِهِ – {وَكَانَتْ مِنَ القَانِتِينَ} [التحريم: 12]

حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ مُرَّةَ الهَمْدَانِيِّ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.