தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-17033

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.

யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுத்தாலும், அல்லது (அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின்) அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாத்தாலும் போராளியின் கூலியில் எதுவும் குறையாமல் அவருக்கும் அவரின் கூலி போன்று எழுதப்படும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 17033)

حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ فَطَّرَ صَائِمًا، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ، إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ، وَمَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الْغَازِي شَيْءٌ»

وَيَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا إِلَّا أَنَّهُ قَالَ: «مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17033.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-16698.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் அபூ ரபாஹ் அவர்கள் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-807 .

  • இந்த செய்தியின் இரண்டாவது பகுதி வேறு சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது. பார்க்க : புகாரி-2843 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.