தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-689

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

(தடுப்பாக) கைத்தடி இல்லாவிட்டால் முன்னால் கோடு போட்டு தொழுதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 689)

بَابُ الْخَطِّ إِذَا لَمْ يَجِدْ عَصًا

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، حَدَّثَنِي أَبُو عَمْرِو بْنُ مُحَمَّدِ بْنِ حُرَيْثٍ، أَنَّهُ سَمِعَ جَدَّهُ حُرَيْثًا يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَكُنْ مَعَهُ عَصًا فَلْيَخْطُطْ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ أَمَامَهُ»،


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-689.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-590.




إسناد ضعيف فيه أبو عمرو بن حريث العذري وهو مجهول

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஅம்ர் பின் முஹம்மத்பின் ஹுரைஸ் என்பவரும் அவரின் பாட்டனார் ஹுரைஸ் பின் ஸுலைமும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அபூதாவூத்-689 , 690 , இப்னு மாஜா-943 , அஹ்மத்-7392 , 7393 , 7394 , 7461 , 7615 , முஸ்னத் தயாலிஸீ-2715 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2286 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-8844 , இப்னு குஸைமா-811 , 812 , இப்னு ஹிப்பான்-2361 , 2376 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.