பாடம் : 11 இரவில் தஹஜ்ஜுத் எனும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. இது உமக்கு அதிகப் படியான தொழுகையாகும். உம்முடைய இறைவன் உம்மை (மகாமு மஹ்மூத் எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம் எனும் (17:79ஆவது) இறைவசனம்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, ‘இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்’ என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் (‘மகாமு மஹ்மூத்’ எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.
Book : 65
(புகாரி: 4718)بَابُ قَوْلِهِ: {عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا} [الإسراء: 79]
حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ آدَمَ بْنِ عَلِيٍّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ
إِنَّ النَّاسَ يَصِيرُونَ يَوْمَ القِيَامَةِ جُثًا، كُلُّ أُمَّةٍ تَتْبَعُ نَبِيَّهَا يَقُولُونَ: يَا فُلاَنُ اشْفَعْ، يَا فُلاَنُ اشْفَعْ، حَتَّى تَنْتَهِيَ الشَّفَاعَةُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَلِكَ يَوْمَ يَبْعَثُهُ اللَّهُ المَقَامَ المَحْمُودَ
Bukhari-Tamil-4718.
Bukhari-TamilMisc-4718.
Bukhari-Shamila-4718.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-4374.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . இஸ்மாயீல் பின் அபான்-அல்அஸ்தீ
3 . ஸல்லாம் பின் ஸுலைம்-அபுல்அஹ்வஸ்
4 . ஆதம் பின் அலீ-அல்இஜ்லீ
5 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
சமீப விமர்சனங்கள்