தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5019

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 (குர்ஆனின்) இரு அட்டைகளுக்கிடையே உள்ளவற்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் (நம்மிடையே) விட்டுச்சென்றார்கள் எனும் கூற்று.43

 அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார்

நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஷத்தாத்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் (உலகைப் பிரிந்தபோது , இந்தக் குர்ஆனில் இடம் பெறாத) வேறு (இறைவசனங்கள்) எதையும் (நம்மிடையே)விட்டுச் சென்றார்களா?’ என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத் தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் (அலீ(ரலி) அவர்களின் புதல்வரான) முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அவர்களிடம் சென்று, இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தது போன்றே) ‘(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 66

(புகாரி: 5019)

بَابُ مَنْ قَالَ: «لَمْ يَتْرُكِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ»

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ

دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ، عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ: أَتَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ» قَالَ: وَدَخَلْنَا عَلَى مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، فَسَأَلْنَاهُ، فَقَالَ: «مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.