தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4338

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை அபூபக்ர் (ரலி) அவர்கள் (உரை நிகழ்த்த எழுந்து நின்று) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அதில், மக்களே! நீங்கள், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால் அதற்கு பொருத்தமில்லாத பொருள் கொள்கின்றீர்கள்.

(அதன் விளக்கம் என்னவெனில்) “மக்கள், அநியாயம் செய்யும் ஒருவனை கண்டும் அவனுடைய கையைப் பிடித்து அதைத் தடுக்காமல் இருந்தால் (நல்லோர், தீயோர்) என அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நாங்கள் செவியேற்றுள்ளோம் எனக் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹுஷைம் அவர்களிடமிருந்து அம்ர் பின் அவ்ன் அவர்கள் கீழ்கண்டவாறு அறிவித்துள்ளார்:

“ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள மனிதர்கள் அதைத் தடுக்காவிட்டால், அவர்கள் இறப்பதற்குள் அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடையும்”என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

காலித் பின் அப்துல்லாஹ் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அபூஉஸாமா அவர்களும், மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.

ஷுஅபா அவர்கள் கீழ்கண்ட வாசக அமைப்பில் அறிவித்துள்ளார்:

“ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ள அதிகமானவர்கள் இருந்தும் அதைத் தடுக்காவிட்டால்…”

(அபூதாவூத்: 4338)

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا هُشَيْمٌ، الْمَعْنَى، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ:

قَالَ أَبُو بَكْرٍ: بَعْدَ أَنْ حَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ: يَا أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ، وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَوَاضِعِهَا: {عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، قَالَ: عَنْ خَالِدٍ، وَإِنَّا سَمِعْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوُا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ، أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ»

وَقَالَ عَمْرٌو: عَنْ هُشَيْمٍ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا، ثُمَّ لَا يُغَيِّرُوا، إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ مِنْهُ بِعِقَابٍ»

قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ كَمَا قَالَ خَالِدٌ أَبُو أُسَامَةَ: وَجَمَاعَةٌ، وَقَالَ شُعْبَةُ فِيهِ: «مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي هُمْ أَكْثَرُ مِمَّنْ يَعْمَلُهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4338.
Abu-Dawood-Alamiah-3775.
Abu-Dawood-JawamiulKalim-3777.




மேலும் பார்க்க: இப்னு மாஜா-4005 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.