தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1503

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து (ஸுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில்) புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள் தனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தார்கள். (ஜுவைரியா (ரலி) அவர்களின் ஆரம்பப் பெயர் புர்ரா என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் தான், ஜுவைரியா என்று மாற்றினார்கள்.)

பிறகு நபி (ஸல்) அவர்கள் (முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் ஜுவைரியா (ரலி) அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம், “நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கவர்கள் “ஆம்” என்று பதலிளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹீ அதத கல்கிஹீ, வ ரிளா நஃப்சிஹீ, வ ஸினத்த அர்ஷிஹீ, வ மிதாத கலிமாத்திஹீ (ஆகியவையாகும்)” என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

(அபூதாவூத்: 1503)

حَدَّثَنَا دَاوُدُ بْنُ أُمَيَّةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عِنْدِ جُوَيْرِيَةَ، وَكَانَ اسْمُهَا بُرَّةَ، فَحَوَّلَ اسْمَهَا، فَخَرَجَ وَهِيَ فِي مُصَلَّاهَا وَرَجَعَ وَهِيَ فِي مُصَلَّاهَا، فَقَالَ: «لَمْ تَزَالِي فِي مُصَلَّاكِ هَذَا؟»، قَالَتْ: نَعَمْ، قَالَ: «قَدْ قُلْتُ بَعْدَكِ أَرْبَعَ كَلِمَاتٍ، ثَلَاثَ مَرَّاتٍ، لَوْ وُزِنَتْ بِمَا قُلْتِ لَوَزَنَتْهُنَّ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1503.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


2 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


மேலும் பார்க்க: முஸ்லிம்-5272.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.