தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-75

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 38

பூனை வாய் வைத்த தண்ணீர்.

கப்ஷா பின்த் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூகத்தாதா (ரலி) அவர்களின் மகனின் மனைவியாக இருந்தேன். என் மாமனார் அபூகத்தாதா (ரலி) அவர்கள் ஒருநாள் என் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுக்கு ‘உளூ’ செய்ய பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன். ஒரு பூனை வந்து அதில் கொஞ்சம் தண்ணீரைக் குடித்தது. (என் மாமனார், பூனை சிரமப்படாமல் நன்றாகக்) குடிப்பதற்காகப் பாத்திரத்தைச் சாய்த்தார்கள். (பூனை திருப்தியாகக் குடித்தது).

நான் அதை (வியப்புடன்) உற்று நோக்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அபூகத்தாதா (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகளே! (நான் இவ்வாறு செய்ததைப் பார்த்து) ஆச்சரியப்படுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “பூனை அசுத்தமான பிராணியல்ல. அது வீட்டில் (உங்களுடன்) சுற்றித் திரிகிற பிராணிகளில் ஒன்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத்: 75)

38- بَابُ سُؤْرِ الْهِرَّةِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ – وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ

أَنَّ أَبَا قَتَادَةَ، دَخَلَ فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ فَشَرِبَتْ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّهَا مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ وَالطَّوَّافَاتِ»


Abu-Dawood-Tamil-68.
Abu-Dawood-TamilMisc-68.
Abu-Dawood-Shamila-75.
Abu-Dawood-Alamiah-68.
Abu-Dawood-JawamiulKalim-68.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-46 , அஹ்மத்-22528 , 22580 , 22636 , 22637 , தாரிமீ-763 , இப்னு மாஜா-367 , அபூதாவூத்-75 , திர்மிதீ-92 , நஸாயீ-68 , 340 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.