1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையில், ஒரு மனிதனை மலை போன்ற அளவு நன்மைகள் பின்தொடரும். உடனே அவன் இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இது கிடைத்தது)” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ نَافِعٍ قَالَ: نا الْحُسَيْنُ بْنُ الْفَضْلِ بْنِ أَبِي حَدِيدَةَ الْوَاسِطِيُّ قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ عَطِيَّةَ الْعَوْفِيُّ، عَنْ أَخِيهِ الْحَسَنِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِيهِ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَتْبَعُ الرَّجُلَ مِنَ الْحَسَنَاتِ يَوْمَ الْقِيَامَةِ أَمْثَالُ الْجِبَالِ، فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطِيَّةَ إِلَّا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ “
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1894.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1934.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் உயைனா மிக பலவீனமானவர்; மேலும் அதிய்யா பின் ஸஃத், அல்ஹஸன் பின் அதிய்யா, அப்துல்லாஹ் பின் அதிய்யா போன்றோரும் பலவீனமானவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1894,
மேலும் பார்க்க: அஹ்மத்-10610.
சமீப விமர்சனங்கள்