ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 44 மக்காவின் வீடுகள் வாரிசுப் பொருளாவதும், அதை விற்பதும் வாங்குவதும் செல்லும்.
(மற்ற இடங்களைவிடக் குறிப்பாக) மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள்.
ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக, எவர் நிராகரித்து, உள்ளூர்வாசிகளும் வெளியூர் வாசிகளும் (ஹரமில் தங்குவதற்குச்) சம உரிமையுடையவர்களாயிருக்கும் நிலையில், நாம் மனித சமுதாயத்திற்காக (புனிதத் தலமாக) ஆக்கியிருக்கின்ற மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (இறை நம்பிக்கையாளர்களைத்) தடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையும், யார் அதில் (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனையும் நோவினை தரும் வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (22:25).
1588. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்? அங்குள்ள உங்கள் வீட்டிலா?’ என நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘(அபூ தாலிபின் மகன்) அகீல், தம் தங்கும் விடுதிகள் அல்லது வீடுகள் எவற்றையாவது விட்டுச் சென்றுள்ளாரா என்ன?’ எனக் கேட்டார்கள்.
அபூ தாலிபின் சொத்துக்களுக்கு அம்லும், தாலிபும் வாரிசானார்கள்.
أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ فِي دَارِكَ بِمَكَّةَ؟ فَقَالَ: «وَهَلْ تَرَكَ عَقِيلٌ مِنْ رِبَاعٍ أَوْ دُورٍ»،
وَكَانَ عَقِيلٌ وَرِثَ أَبَا طَالِبٍ هُوَ وَطَالِبٌ، وَلَمْ يَرِثْهُ جَعْفَرٌ وَلاَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، شَيْئًا لِأَنَّهُمَا كَانَا مُسْلِمَيْنِ، وَكَانَ عَقِيلٌ وَطَالِبٌ كَافِرَيْنِ،
فَكَانَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: لاَ يَرِثُ المُؤْمِنُ الكَافِرَ ،
قَالَ ابْنُ شِهَابٍ: وَكَانُوا يَتَأَوَّلُونَ قَوْلَ اللَّهِ تَعَالَى: {إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ، وَالَّذِينَ آوَوْا وَنَصَرُوا أُولَئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ} [الأنفال: 72] الآيَةَ
சமீப விமர்சனங்கள்