பாடம்:
அப்துல்லாஹ் அஸ்ஸுரகீ அவர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள். இவருக்கு உபைத் பின் ரிஃபாஆ அஸ்ஸுரகீ என்ற பெயரும் கூறப்படுகிறது.
15492. உஹது(போர்)க் களத்தில் (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்ற பின் நபி (ஸல்) அவர்கள், “என் இறைவனை நான் புகழ்வதற்கு அணிவகுத்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். முஸ்லிம்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து வரிசையாக நின்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“அல்லாஹும்ம லகல் ஹம்து குல்லுஹு. அல்லாஹும்ம லா காபிள லிமா பஸத்த, வலா பாஸித லிமா கபள்த, வலா ஹாதிய லிமா அள்லல்த, வலா முதில்ல லிமன் ஹதைத, வலா முஃதிய லிமா மனஃத, வலா மானிஅ லிமா அஃதைத, வலா முகர்ரிப லிமா பாஅத்த, வ லா முபாஇத லிமா கர்ரப்த.
அல்லாஹும் மப்ஸுத் அலைனா மின் பரகாதிக, வ ரஹ்மதிக, வ ஃபள்லிக வ ரிஸ்கிக், அல்லாஹும்ம இன்னி அஸ்அலுகன் நஈமல் முகீம்-அல்லதீ லா யஹூலு வலா யஸூல். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகன் நஈம யவ்மல் அய்லஹ், வல்அம்ன யவ்மல் கவ்ஃப். அல்லாஹும்ம இன்னீ ஆயிதுன் பிக மின் ஷர்ரி மா அஃதைதனா, வ ஷர்ரி மா மனஃத.
அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் ஈமான், வ ஸய்யின்ஹு ஃபீ குலூபினா, வ கர்ரிஹ் இலைனல் குஃப்ர, வல்ஃபுஸூக, வல்இஸ்யான். வஜ்அல்னா மினர் ராஷிதீன். அல்லாஹும்ம தவஃப்பனா முஸ்லிமீன், வ அஹ்யினா முஸ்லிமீன், வ அல்ஹிக்னா பிஸ்ஸாலிஹீன் ஃகைர கஸாயா, வலா மஃப்தூனீன். அல்லாஹும்ம காதிலில் கஃபரா-அல்லதீன யுகத்திபூன ருஸுலக், வ யஸுத்தூன அன் ஸபீலிக், வஜ்அல் அலைஹிம் ரிஜ்ஸக வ அதாபக். அல்லாஹும்ம காதிலில் கஃபரா-அல்லதீன ஊதூல் கிதாப இலாஹல் ஹக்”
(பொருள்: அல்லாஹ்வே! புகழனைத்தும் உனக்கே உரியது. அல்லாஹ்வே! நீ விரிவுபடுத்தியதை எவராலும் சுருக்க முடியாது; நீ சுருக்கியதை எவராலும் விரிவுபடுத்த முடியாது. நீ வழிகேட்டில் விட்டுவிட்டவருக்கு எவராலும் நேர்வழி காட்ட முடியாது; நீ நேர்வழி காட்டியவரை எவராலும் வழிகேட்டில் தள்ள முடியாது. நீ தடுத்ததை எவராலும் வழங்க முடியாது; நீ வழங்கியதை எவராலும் தடுக்க முடியாது. நீ தூரமாக்கியதை எவராலும் நெருக்கமாக்க முடியாது; நீ நெருக்கமாக்கியதை எவராலும் தூரமாக்க முடியாது.
அல்லாஹ்வே! உனது அபிவிருத்தியையும் அருளையும் அன்பையும் உணவையும் வாழ்வாதாரத்தையும் விசாலமாக்குவாயாக! அல்லாஹ்வே! அகலாத, விலகாத, நிலையான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். அல்லாஹ்வே! ஏழ்மை நாளில் உனது அருளை வேண்டுகிறேன். அச்சமுடைய நாளில் பாதுகாப்பைக் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்கு வழங்கியவற்றின் தீங்கிலிருந்தும் நீ எங்களுக்குத் தடுத்தவற்றின் தீங்கிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.
அல்லாஹ்வே! இறை நம்பிக்கையை எங்களுக்கு விருப்பமுள்ளதாகவும், எங்கள் உள்ளங்களுக்கு அழகானதாகவும் ஆக்கி வை. இறைமறுப்பு, பாவம், வரம்புமீறுதல் போன்ற காரியங்களை எங்களுக்கு வெறுப்பானதாக ஆக்கி வை. எங்களை நேர்வழிபெற்றோரில் சேர்த்து விடுவாயாக!
அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை (இழிவானவர்களோ, அல்லது குழப்பவாதிகளோ இல்லாத) நல்லடியார்களுடன் இணைத்திடுவாயாக!
அல்லாஹ்வே! உன்னுடைய தூதர்களை மறுத்து, உன் பாதையை விட்டுத் தடுக்கும் நிராகரிப்பாளர்களை அழித்துவிடு! அவர்கள் மீது உனது கோபத்தையும் அழிவையும் இறக்குவாயாக! அல்லாஹ்வே! உண்மையான இறைவனான (உன்னை) மறுக்கும் வேதக்காரர்களை அழிப்பாயாக!)
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)
அஹ்மத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை (அப்துல்வாஹித் பின் அய்மன் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில்) மர்வான் அல்ஃபராஸீ அவர்கள் ஒரு தடவை இந்த அறிவிப்பாளர்தொடரை இப்னு ரிஃபாஆ அஸ்ஸுரகீ —> அவரின் தந்தை என்று அறிவித்தார். மற்றவர்கள் உபைத் பின் ரிஃபாஆ அஸ்ஸுரகீ என்று (தந்தையை குறிப்பிடாமல் முர்ஸலாக) அறிவித்தனர். (எனவே இந்த அறிவிப்பாளர்தொடரில் மர்வான் அவர்கள் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் அஸ்ஸுரகீ என்று பெயரைக் கூறியிருப்பது தவறாகும்…)
حَدِيثُ عَبْدِ اللَّهِ الزُّرَقِيِّ، وَيُقَالُ عُبَيْدُ بْنُ رِفَاعَةَ الزُّرَقِيُّ
حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ الْمَكِّيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، وَقَالَ الْفَزَارِيُّ مَرَّةً: عَنِ ابْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، وَقَالَ غَيْرُ الْفَزَارِيِّ: عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ ، قَالَ
لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَفَأَ الْمُشْرِكُونَ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَوُوا حَتَّى أُثْنِيَ عَلَى رَبِّي، فَصَارُوا خَلْفَهُ صُفُوفًا، فَقَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلَا بَاسِطَ لِمَا قَبَضْتَ، وَلَا هَادِيَ لِمَا أَضْلَلْتَ، وَلَا مُضِلَّ لِمَنْ هَدَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلَا مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ وَالْأَمْنَ يَوْمَ الْخَوْفِ، اللَّهُمَّ إِنِّي عَائِذٌ بِكَ مِنْ شَرِّ مَا أَعْطَيْتَنَا وَشَرِّ مَا مَنَعْتَ، اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ، وَالْفُسُوقَ، وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ رُسُلَكَ، وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَهَ الْحَقِّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-14945.
Musnad-Ahmad-Shamila-15492.
Musnad-Ahmad-Alamiah-14945.
Musnad-Ahmad-JawamiulKalim-15189.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . மர்வான் பின் முஆவியா-அல்ஃபஸாரீ (3. பலமானவர்).
3 . அப்துல்வாஹித் பின் அய்மன்-அல்மக்ஸூமீ (3. பலமானவர்).
4 . உபைத் பின் ரிஃபாஆ (3. பலமானவர்).
5 . ரிஃபாஆ பின் ராஃபிஃ-அஸ்ஸுரகீ (1. நபித்தோழர்).
مختصر تلخيص الذهبي (1/ 402)
131 – حديث خلاد بن يحيى. حدثنا عبد الواحد بن أيمن، عن عبيد بن رفاعة [ابن رافع] (1) الزرقي عن أبيه قال: لما كان يوم أحد انكفأ المشركون فقال رسول الله -صلى الله عليه وسلَّم-: “استووا حتى أثني على ربي” [فصاروا] (2) خلفه صفوفاً ثم قال: ” اللهم لك الحمد كله لا مانع لما أعطيت … إلخ”.
قال: على شرط البخاري ومسلم. قلت: لم يخرجا لعبيد [وهو ثقة] (3) والحديث مع [نظافة] (4) إسناده منكر أخاف [أن يكون] (5) موضوعاً. رواه عن خلاد، ابن أبي ميسرة.
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இமாம் கூறுகிறார்:
கல்லாத் பின் யஹ்யா அவர்கள் அப்துல்வாஹித் பின் அய்மன் —> உபைத் பின் ரிஃபாஆ பின் ராஃபிஃ அஸ்ஸுரகீ —> அவரது தந்தை (ரிஃபாஆ பின் ராஃபிஃ) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்தி:
உஹுது போரன்று இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்றபிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் இறைவனை நான் புகழும் வரை வரிசையாக நில்லுங்கள்.” உடனே மக்கள் அவர்களுக்குப் பின்னால் வரிசையாக நின்றனர். பிறகு அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே! புகழனைத்தும் உனக்கே உரியது. நீ வழங்குவதை தடுப்பவன் யாருமில்லை…” (இவ்வாறு நீண்ட ஹதீஸ் தொடர்கிறது).
இந்தச் செய்தி புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோரின் நிபந்தனையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் கூறியுள்ளார். ஆனால் உபைத் பலமானவர் தான் என்றாலும் இவரின் அறிவிப்பை புகாரியும் முஸ்லிமும் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை. மேலும் ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் (வெளிப்படையில்) தூய்மையாக-சரியாக இருப்பது போல் தோற்றமளித்தாலும், இது முன்கர் (மறுக்கப்பபட வேண்டிய) செய்தியாகும். இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இந்தச் செய்தியை கல்லாதிடமிருந்து இப்னு அபூமைஸரா அறிவித்துள்ளார்.
(நூல்: முக்தஸர் தல்கீஸ்-தஹபீ-1/402)
[الجامع الكامل في الحديث الصحيح الشامل المرتب على أبواب الفقه 8/ 281:]
وتعقبه الذهبي فقال: لم يخرجا لعبيد وهو ثقة، والحديث مع نظافة إسناده منكر، أخاف أن يكون موضوعًا. رواه عن خلاد بن أبي ميسرة. ثم يبدو تغير حكم الذهبي في موضع آخر رواه الحاكم في المستدرك (3/ 23 – 24) من غير طريق ابن أبي مرة، عن خلاد بن يحيى كما رواه في الموضع الأول المشار إليه أعلاه، فإنه وافق الحاكم على أنه شرط الشيخين.
…
1 . இந்தக் கருத்தில் ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மர்வான் பின் முஆவியா, கல்லாத் பின் யஹ்யா —> அப்துல்வாஹித் பின் அய்மன் —> உபைத் பின் ரிஃபாஆ —> ரிஃபாஆ (ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: அஹ்மத்-15492, அல்அதபுல் முஃப்ரத்-699, முஸ்னத் பஸ்ஸார்-3724, குப்ரா நஸாயீ- 10370, அல்முஃஜமுல் கபீர்-4549, ஹாகிம்-1868, 4308, …
- ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம் —> அப்துல்வாஹித் பின் அய்மன் —> உபைத் பின் ரிஃபாஆ —> நபி (ஸல்)
பார்க்க: குப்ரா நஸாயீ-10371,
اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ
மொழியாக்கத்தில் மேலும் முஸ்லிம்களாக வாழச் செய்வாயாக என்பது விடுபட்டுள்ளது.
துஆ transliteration போட்டா மனப்பாடம் செய்ய எளிமையாக இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும். துஆ transliteration சேர்த்துள்ளோம், ஜஸாகல்லாஹு கைரா.
ஜஸாக்கல்லாஹூம்ஃகைரா, மொழியாக்கம் சரிபார்த்து கொள்ளுங்கள்
வஅலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு