Author: Farook

Abu-Dawood-100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

100. எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள். அப்போது ‎நாங்கள் அவர்களுக்கு உலூச் செய்ய பித்தளை பாத்திரத்தில் நீர் வழங்கினோம். ‎அவர்கள் உலூச் செய்தார்கள் என அப்துல்லாஹ் பின் ஸைது (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுமாஜாவிலும் இது இடம் பெற்றுள்ளது.)‎


«جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْرَجْنَا لَهُ مَاءً فِي تَوْرٍ مِنْ صُفْرٍ فَتَوَضَّأَ»


Abu-Dawood-98

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 47

பித்தளை பாத்திரத்தில் உளூச் செய்தல்.

98. நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பித்தளைப் பாத்திரத்தில் ‎குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَوْرٍ مِنْ شَبَهٍ»


Abu-Dawood-97

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 46

உளூவை பூரணமாகச் செய்தல்.

97. தங்களது குதிகால்களில் தண்ணீர் படாமல் தோற்றமளித்த ஒரு கூட்டத்தாரை பார்த்து ‎‎(உலூச் செய்யும் போது நன்றாக நனையாத) குதிகால்களுக்கு நரகம் என்ற நாசம் ‎உண்டாவதாக! (இதை அஞ்சி) உலூவை பூரணமாக செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் ‎தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ‎அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இதை முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மது, தாரகுத்னீ, புகாரி ஆகியோரும் ‎அறிவித்துள்ளார்கள்.)‎


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى قَوْمًا وَأَعْقَابُهُمْ تَلُوحُ، فَقَالَ: «وَيْلٌ لِلْأَعْقَابِ مِنَ النَّارِ، أَسْبِغُوا الْوُضُوءَ»


Abu-Dawood-96

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 45

தண்ணீரை விரயமாக்குதல்.

96. யா அல்லாஹ்! நான் சுவனத்தில் நுழைந்ததும் அதன் வலப்பக்கத்தில் எனக்கு ஒரு ‎வெள்ளைமாளிகையை அருள்வாயாக என உன்னிடம் வேண்டுகிறேன் என்று தனது ‎மகன் பிரார்த்தனை செய்வதை செயியுற்ற அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி) ‎அவர்கள் தமது மகனை நோக்கி, என்னருமை மகனே! நீ அல்லாஹ்வின் சுவனத்தை ‎கேள். (பிரார்த்தனையில் வரம்பு மீறாதே) ஏனெனில் சுத்தம் செய்வதிலும் ‎பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறும் ஒரு கூட்டம் எனது இந்த சமுதாயத்தில் இனி ‎உருவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என அறிவுரை ‎வழங்கினார்கள்.‎

‎(குறிப்பு: இது அஹ்மது, இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அப்துல்லாஹ் இப்னு ‎முகப்பல் அவர்களின் மகன் என்பவர் யார் என தெரியாதவர்.)‎


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ، سَمِعَ ابْنَهُ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْقَصْرَ الْأَبْيَضَ، عَنْ يَمِينِ الْجَنَّةِ إِذَا دَخَلْتُهَا، فَقَالَ: أَيْ بُنَيَّ، سَلِ اللَّهَ الْجَنَّةَ، وَتَعَوَّذْ بِهِ مِنَ النَّارِ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ قَوْمٌ يَعْتَدُونَ فِي الطَّهُورِ وَالدُّعَاءِ»


Abu-Dawood-95

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

95. நபி (ஸல்) அவர்கள் (இரண்டு ராத்தல்) கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் உலூச் ‎செய்தார்கள். ஒரு ஸாவு (இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) ‎தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-‎

இந்த ஹதீஸை ஷரீக் என்பார் வாயிலாக யஹ்யா பின் ஆதம் அறிவிக்கும்போது ‎‎(அப்துல்லாஹ் பின் ஜப்ர் என்பதற்கு பதிலாக) இப்னு ஜப்ர் பின் அதீக் எனக் ‎கூறியுள்ளர். அப்துல்லாஹ் பின் ஈஸா என்பார் வழியாக இதை சுஃப்யான் ‎அறிவிக்கும்போது எனக்கு ஜப்ர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார் எனக் ‎குறிப்பிட்டுள்ளர்.‎

மேலும் இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் : அப்துல்லாஹ் பின் ஜப்ர் ‎அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டதாக ஷுஃபா அறிவிக்கின்றார். எனினும் ‎ஷுஃபா அவர்கள் இரண்டு ராத்தல்கள் எனக் குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் ஒரு ‎மக்கூக் அளவு தண்ணீரில் உலூச் செய்வார்கள் என அறிவிக்கிறார்.‎

மேலும் இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِإِنَاءٍ يَسَعُ رَطْلَيْنِ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»


Abu-Dawood-94

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

94. நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை உலூச் செய்தனர். ஒரு முத்து (இரு கைகள் ‎கொள்ளளவு) நீரில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது ‎என உம்மு உமாரா (ரலி) அறிவிக்கிறார்கள்.‎

‎(குறிப்பு: இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், நஸயீ ஆகியவற்றிலும் இது இடம் ‎பெற்றுள்ளது.)‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَيِ الْمُدِّ»


Abu-Dawood-93

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

93. மேற்கண்ட ஹதீஸே ஜாபிர் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ‎அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அபூயஸீத் கூபாவாசிகள் மூலம் ‎அறிவித்தால் அது ஆதாரமாக கொள்ளத்தக்கதல்ல.‎


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»


Abu-Dawood-92

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 44

உளூச் செய்ய போதுமான அளவு தண்ணீர்.

92. நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து (இரு கை கொள்ளளவு) தண்ணீரில் உலூச் செய்து ‎விடுபவர்களாகவும் ஒரு ஸாவு (இரு கை கொள்ளளவு தண்ணீரின் நான்கு மடங்கு) ‎தண்ணீரில் குளித்து விடுபவர்களாகவும் இருந்தார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) ‎அறிவிக்கிறார்கள். இதை அப்பான் அவர்கள் கதாதா வாயிலாக அறிவிக்கும் போது ‎ஸபிய்யா அவர்களிடம் கேட்டதாக இமாம் அபூதாவூத் கூறுகிறார்கள்.‎

‎(குறிப்பு: முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜா, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் ‎இடம் பெற்றுள்ளது.)‎


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِالصَّاعِ، وَيَتَوَضَّأُ بِالْمُدِّ»


Abu-Dawood-91

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது


«لَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ» – ثُمَّ سَاقَ نَحْوَهُ عَلَى هَذَا اللَّفْظِ قَالَ: «وَلَا يَحِلُّ لِرَجُلٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخْتَصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Next Page » « Previous Page