Author: Farook

muwatta-malik-565

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

565. நாங்கள் நபி( ஸல்) அவர்களின் பின்னே தொழுது கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவாகள் ருகூஉ விலிருந்து தன் தலையை உயர்த்தி ‘ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா” என்று அவர்கள் கூறிய போது அவர்களின் பின்னே இருந்த ஒருவர் ‘ரப்பனா வலகல் ஹம்து, ஹம்தன் கதீரன் தப்பியபன் முபாரகன் ஃபீஹி” என்று கூறினார்.

நபி (ஸல்) அவா்கள் தொழுகையை முடித்ததும், ”சற்று முன் கூறியவர் யார்?”” என்று கேட்டார்கள். அந்த மனிதர் ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! நான் தான்”” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், ”(நீ கூறியதை) தங்களில் யார் முதலில் பதிவு செய்வது என முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் போட்டி போட்டதை நான் பார்த்தேன்”” என்று கூறினார்கள்.

இதை ரிஃபாஆ இப்னு ராஃபிஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.


كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا رَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ»، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: «رَبَّنَا وَلَكَ الْحَمْدُ. حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ». فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ الْمُتَكَلِّمُ آنِفًا؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدْ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهُنَّ أَوَّلًا»


muwatta-malik-564

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

564. ”உங்களின் அந்தஸ்துகளை உயர்த்துகின்ற, உங்கள் எஜமானனிடம் உங்களை தூய்மைப்படுத்துகின்ற உங்களின் செயல்களில் சிறந்ததாகவும், தங்கம், பட்டை தர்மம் செய்வதை விட உங்களுக்கு சிறந்ததாகவும், மேலும் உங்களின் எதிரிகளை நீங்கள் சந்தித்து, அவர்களின் கழுத்தை நீங்கள் வெட்டி, உங்கள் கழுத்தை அவர்கள் வெட்டுவது என்பதை விட உங்களுக்கு சிறந்ததாகவும் உள்ளதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று அபுத்தர்தா (ரலி) கேட்ட போது, மக்கள் ‘சரி” என்று கூறினார்கள்.

”அது, அல்லாஹ்வை துதிப்பது தான் என்று அபுத்தர்தா (ரலி) கூறினார்கள்.

இதை அறிவிக்கும் ஸியாத் பின் அபூஸியாத் என்பவர் ”அல்லாஹ்வின் வேதனையிலிருந்து ஆதமின் மகனைக் காப்பாற்றும் செயல்களில் அல்லாஹ்வைத் திக்ர் செய்தல் என்பதை விட வேறு இல்லை” என முஆத் இப்னு ஜபல் (ரலி) கூறியதாகவும் கூறுகின்றார்கள்.


أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ أَعمَالِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَخَيْرٍ لَكُمْ مِنْ إِعْطَاءِ الذَّهَبِ وَالْوَرِقِ، وَخَيْرٍ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ، وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ؟ قَالُوا: بَلَى، قَالَ: ذِكْرُ اللَّهِ تَعَالَى ” قَالَ زِيَادُ بْنُ أَبِي زِيَادٍ، وَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا عَمِلَ ابْنُ آدَمَ مِنْ عَمَلٍ أَنْجَى لَهُ مِنْ عَذَابِ اللَّهِ، مِنْ ذِكْرِ اللَّهِ»


muwatta-malik-563

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

563. நிலையான நற்செயல்களில் ஒன்றாக, ஒரு அடியான் ”அல்லாஹு அக்பர், சுப்ஹான்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்”” என்று கூறுவதும் ஆகும் என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறியதாக உமாரா இப்னு ஸய்யத் கூறுகின்றார்கள்.


«فِي الْبَاقِيَاتِ الصَّالِحَاتِ»: إِنَّهَا قَوْلُ الْعَبْدِ: «اللَّهُ أَكْبَرُ. وَسُبْحَانَ اللَّهِ. وَالْحَمْدُ لِلَّهِ. وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ. وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


muwatta-malik-562

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

562. யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், 33 முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், 33 முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் 99 முறை கூறி, இறுதியில் 100 வது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)

என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸீத் (ரஹ்)


«مَنْ سَبَّحَ دُبُرَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَخَتَمَ الْمِائَةَ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ ذُنُوبُهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


muwatta-malik-561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِئَةَ مَرَّةٍ، حُطَّتْ عَنهُ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ.


muwatta-malik-560

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 136

அல்லாஹ்வை நினைவு கூர்தல்.

560.  ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷாரிகலஹூ லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” என்று ஒருவர் நூறு தடவை கூறினால், அவருக்கு பத்து அடிமைகளை உரிமை விட்ட நன்மைகள் உண்டு. அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். மேலும் நூறு தீமைகள் அழிக்கப்பட்டு விடும். அந்நாளில் (காலை முதல்) மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் உண்டு. வேறு எவரும் இவர் செய்ததை விட சிறந்ததை செய்து விட முடியாது. ஆனால் இதை விட அதிகமாக செய்ததைத் தவிர என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அரபி வாசகத்தின் பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவன் தனித்தவன். அவனுக்கு இணையாளன் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம். அவனுக்கே புகழ் அனைத்தும். அவனே அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்).


مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ. كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ. وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ


muwatta-malik-559

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

559. “குல்ஹுவல்லாஹு அஹத்” எனும் (112 ஆவது) அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு ஈடாகும்.

மேலும் ”தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” எனும் (67 ஆவது) அத்தியாயம், அதை ஓதியவருக்காக (மறுமையில் அல்லாஹ்விடம்) வாதிடும்” என்று ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்)


أَنَّ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ، وَأَنَّ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ تُجَادِلُ عَنْ صَاحِبِهَا»


muwatta-malik-558

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

558. நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ”குல்ஹுவல்லாஹு அஹது”” சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். ”அவருக்கு அவசியமாகி விட்டது”” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்ன அவசியமாகி விட்டது? என்று கேட்டேன். ”சொர்க்கம்”” என்று கூறினார்கள். உடனே நான் அந்த மனிதரிடம் சென்று, இச்செய்தியைக் கூற எண்ணினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் காலை நேர உணவு தவறிவிடுமோ எனப் பயந்தேன். எனவே நபி (ஸல்) அவர்களுடன் காலை நேர உணவைச் சாப்பிட்டேன். பின்பு அந்த மனிதரிடம் சென்றேன். அவர் சென்று விட்டதைக் கண்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு கத்தாப் குடும்பத்தாரின் அடிமையான உபைத் இப்னு ஹுனைன் கூறுகிறார்.


أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. «فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَسَأَلْتُهُ: مَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «الْجَنَّةُ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ إِلَيْهِ، فَأُبَشِّرَهُ. ثُمَّ فَرِقْتُ أَنْ يَفُوتَنِي الْغَدَاءُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآثَرْتُ الْغَدَاءَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ ذَهَبْتُ إِلَى الرَّجُلِ فَوَجَدْتُهُ قَدْ ذَهَبَ


muwatta-malik-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 135

”குல்ஹுவல்லாஹு அஹத்””, ”தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்”” ஆகிய அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு!

557. ”குல்ஹுவல்லாஹு அஹது”” (எனத் துவங்கும் 112 வது) அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஒரு மனிதர் ஓதுவதைக் கேட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இதுபற்றி கூறினேன். (ஓதிய) அம் மனிதர் அதை குறைவாக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!, நிச்சயமாக அந்த அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாகும்”” என்று கூறினார்கள். அதை அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا. فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ. وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»


muwatta-malik-551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

551. ஜும்ஆ நாளன்று மிம்பரில் இருக்கும் போது உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினார்கள். உடனே மிம்பரை விட்டும் இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்தனர். பின்பு மற்றொரு முறை ஜும்ஆ நாளன்று இதை ஓதினார்கள். மக்கள் ஸஜ்தா செய்ய ஆயத்தமானார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், வேண்டாம். அப்படியே அமருங்கள். இதில் நம் விருப்பம் தானே தவிர அல்லாஹ் இதைக் கட்டாயமாக்கவில்லை” என்று கூறினார்கள். அவர்களும் ஸஜ்தா செய்யவில்லை. மக்கள் ஸஜ்தா செய்வதையும் தடுத்தார்கள்.

இதை உர்வா கூறுகின்றார்கள்.

.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَرَأَ سَجْدَةً، وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ. فَنَزَلَ فَسَجَدَ، وَسَجَدَ النَّاسُ مَعَهُ، ثُمَّ قَرَأَهَا يَوْمَ الْجُمُعَةِ الْأُخْرَى. فَتَهَيَّأَ النَّاسُ لِلسُّجُودِ، فَقَالَ: «عَلَى رِسْلِكُمْ. إِنَّ اللَّهَ لَمْ يَكْتُبْهَا عَلَيْنَا، إِلَّا أَنْ نَشَاءَ». فَلَمْ يَسْجُدْ، وَمَنَعَهُمْ أَنْ يَسْجُدُوا


Next Page » « Previous Page