Author: Farook

muwatta-malik-575

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

575. மதீனாவிற்கு அருகில் உள்ள பனூ முஆபியா குடியிருப்புப் பகுதியில் இருந்த எங்களிடம் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் வந்தார்கள். ”இந்த உங்களின் பள்ளிவாசலில் நபி(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள் என்பதை அறிவீர்களா?”” என்று கேட்டார். அவரிடம் ‘ஆம்” என்றேன். மேலும் அதில் மூலைப் பகுதியை நான் காண்பித்தேன். ”இங்கே மூன்று விஷயங்களுக்காக நபி(ஸல்) அவர்கள் பிரார்தித்ததை நீர் அறிவீரா?”” என்று கேட்டார். ‘ஆம்” என்றேன். ”அவற்றை எனக்குக் கூறு”” என்று கேட்டார்கள்;. ”முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத எதிரி வெற்றி கொள்ளாமல் இருக்கவும், பஞ்சம், வெள்ளத்தால் அவர்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் பிரார்த்தனை செய்தார்கள். அவ்விரண்டையும் கொடுக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கிடையே பிணக்கு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை என்று கூறினேன். ”நீர் உண்மை கூறினீர்”” என்று கூறிய இப்னு உமர்(ரலி) அவர்கள், ”மறுமை நாள் வரை குழப்பம் (பிணக்கு) தொடரும்”” என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


جَاءَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فِي بَنِي مُعَاوِيَةَ، وَهِيَ قَرْيَةٌ مِنْ قُرَى الْأَنْصَارِ، فَقَالَ: هَلْ تَدْرُونَ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِكُمْ هَذَا؟ فَقُلْتُ لَهُ: نَعَمْ، وَأَشَرْتُ لَهُ إِلَى نَاحِيَةٍ مِنْهُ. فَقَالَ: هَلْ تَدْرِي مَا الثَّلَاثُ الَّتِي دَعَا بِهِنَّ فِيهِ؟ فَقُلْتُ: نَعَمْ، قَالَ: فَأَخْبِرْنِي بِهِنَّ. فَقُلْتُ: «دَعَا بِأَنْ لَا يُظْهِرَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ. وَلَا يُهْلِكَهُمْ بِالسِّنِينَ. فَأُعْطِيَهُمَا. وَدَعَا بِأَنْ لَا يَجْعَلَ بَأْسَهُمْ بَيْنَهُمْ. فَمُنِعَهَا» قَالَ: صَدَقْتَ، قَالَ ابْنُ عُمَرَ فَلَنْ يَزَالَ الْهَرْجُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ


muwatta-malik-574

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

574. நபி(ஸல்) அவர்கள் இரவின் ஒரு பகுதியில் தொழத் தயாரானார்கள். அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த கய்யாமுஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, வலகல் ஹம்து, அன்த ரப்புஸ் ஸமாவாத்தி வல் அர்ழி வமன் ஃபீஹின்ன, அன்தல் ஹக்கு, வ கவ்லுகல் ஹக்கு, வ வஹ்துகல் ஹக்கு, வலிகாஉக ஹக்குன் வல் ஜன்னத்த ஹக்கு, வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅது ஹக்குன், அல்லாஹும்ம லக்கல் ஹம்து, வபிக ஆமன்து, வஅலய்க தவக்கல்து, வஇலய்க அனய்து, வபிக காஸம்து, வஇலய்க ஹாகம்து, ஃபஹ்ஃபிர்லீ மா கத்தம்து வ அக்கர்த்து வ அஸ்ரர்து, வ அஹ்லன்து, அன்த இலாஹு லாஇலாஹ இல்லா அன்த என்று பிரார்த்திப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்;(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பொருள்: இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியின் ஒளி ஆவாய். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமியை நிர்வாகம் செய்பவன். உனக்கே புகழ் அனைத்தும். நீயே வானங்கள், பூமி மற்றும் இவ்விரண்டிலும் உள்ளவர்கள் இறைவன் ஆவாய். நீயே உண்மையாளன். உன் வார்த்தை உண்மையானது. உன் வாக்குறுதி உண்மையானது. உன் சந்திப்பு உண்மையானது. சொர்க்கம் உண்மையாகும். நரகம் உண்மையாகும். மறுமையும் உண்மையானது. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பிக்கை கொள்கிறேன். உன் மீதே பொறுப்பேற்படுத்துகின்றேன். உன் பக்கமே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ مِنْ جَوْفِ اللَّيْلِ، يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ. أَنْتَ نُورُ السَّمَوَاتِ وَالْأَرْضِ. وَلَكَ الْحَمْدُ. أَنْتَ قَيَّامُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَلَكَ الْحَمْدُ. أَنْتَ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ، أَنْتَ الْحَقُّ، وَقَوْلُكَ الْحَقُّ، وَوَعْدُكَ الْحَقُّ، وَلِقَاؤُكَ حَقٌّ، وَالْجَنَّةُ حَقٌّ، وَالنَّارُ حَقٌّ، وَالسَّاعَةُ حَقٌّ، اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ، وَبِكَ آمَنْتُ، وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَإِلَيْكَ أَنَبْتُ، وَبِكَ خَاصَمْتُ، وَإِلَيْكَ حَاكَمْتُ. فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ. وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ. أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ»


muwatta-malik-573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

573. குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தது போல், இந்த (பின்வரும்) துஆவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம். வ அஊது பிக மின் அதாபில் கப்ர். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாத்”

(பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நரக வேதனை, மண்ணறை வேதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ. كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»


muwatta-malik-572

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

572. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)


أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ


muwatta-malik-571

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

571. நான் நபி(ஸல்) அவர்களின் அருகே தூங்கிக் கொண்டிருந்தேன். இரவில் அவர்களை நான் (தேடி) துளாவினேன். என் கையால் அவர்களைத் தொட்டேன். என் கை அவர்களின் பாதங்கள் மீது இருந்தது. அவர்கள் ஸஜ்தா செய்தவர்களாக, ”அஊது பிரிழாக மின் ஸக்திக, வபி முஆஃபதிக மின் உகூபதிக்க, வபிக மின்க லா உஹ்ஸீ ஃஸனாஅன் அலய்க, அன்த கமா அஸ்னய்த அலா நஃப்ஸிக”” என்று கூறினார்கள். இதை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதன் பொருள்: இறைவனே! உன் திருப்தி மூலம் உன் கோபத்தை விட்டும், உன் விடுதலை மூலம் உன் தண்டனையை விட்டும், உன் அரவணைப்பு மூலம் உன் புறக்கணிப்பை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். உனக்கு எதிராக புகழை நான் எண்ணவில்லை. நீ, உன்னை நீ புகழ்வது போல் உள்ளவனாவாய்.


كُنْتُ نَائِمَةً إِلَى جَنْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَفَقَدْتُهُ مِنَ اللَّيْلِ، فَلَمَسْتُهُ بِيَدِي، فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمَيْهِ، وَهُوَ سَاجِدٌ، يَقُولُ: «أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَبِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»


muwatta-malik-570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

570. நம் இறைவன் ஒவ்வொரு இரவும் முதல் வானத்தில் இறங்கி, இரவின் மூன்றில் இறுதிப் பகுதி வரை இருந்து கொண்டு. ”என்னிடம் பிரார்த்திப்பவர் யார்? அதை நான் ஏற்கிறேன், என்னிடம் கேட்பவர் யார்? அதை நான் தருகின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? அவரை நான் மன்னிக்கிறேன்”” என்று கூறுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


يَنْزِلُ رَبُّنَا، تَبَارَكَ وَتَعَالَى، كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا. حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ، فَيَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟


muwatta-malik-569

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

569. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي


muwatta-malik-568

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

568. ”இறைவனே! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! நீ விரும்பினால் எனக்கு அருள் புரிவாயாக! என உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் போது கூற வேண்டாம். (மாறாக) கேட்பதை வலியுறுத்திக் கேட்கட்டும்! அவனை கட்டாயப்படுத்துவர் எவருமில்லை என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


لَا يَقُلْ أَحَدُكُمْ إِذَا دَعَا: اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ. اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ. لِيَعْزِمِ الْمَسْأَلَةَ فَإِنَّهُ لَا مُكْرِهَ لَهُ


muwatta-malik-567

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

567. ”அல்லாஹும்ம ஃபாலிகில் இஸ்பாஹி, வஜாஇலில் லய்லி ஸகனன், வஷ்ஷம்சி வல் கமாரி ஹுஸ்பானன் இக்ழி அன்னீத் தய்ன, வ அஹ்னினீ மினல் ஃபக்ரி அவம்திஹ்னீ பிஸம்ஈ வ பஸாரி வகுவ்வத்தீ ஃபீ ஸபீலிக”” என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்தாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.

(இதன் பொருள்: இறைவனே! காலை நேரத்தை உருவாக்கியவனே! இரவை அமைதி பெற ஏற்படுத்தியவனே! சூரியனையும், சந்திரனையும் பிரகாசிக்கச் செய்தவனே! என்னை விட்டும் கடனை நீக்குவாயாக! என்னை ஏழ்மையை விட்டும் பாதுகாப்பாயாக! என் செவிப்புலன், என் பார்வை, என் வலிமை மூலம் உன் வழியில் என்னை பயன்படுத்துவாயாக!)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: ” اللَّهُمَّ فَالِقَ الْإِصْبَاحِ، وَجَاعِلَ اللَّيْلِ سَكَنًا، {وَالشَّمْسِ وَالْقَمَرِ حُسْبَانًا} [الأنعام: 96]، اقْضِ عَنِّي الدَّيْنَ، وَأَغْنِنِي مِنَ الْفَقْرِ، وَأَمْتِعْنِي بِسَمْعِي وَبَصَرِي، وَقُوَّتِي فِي سَبِيلِكَ


muwatta-malik-566

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 137

பிரார்த்தனை பற்றி வந்துள்ளவை.

566. ”ஒவ்வொரு நபிக்கும் தனிப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு. நான் என் பிரார்த்தனையை மறுமையில் என் சமுதாயத்திற்கு பரிந்துரை செய்ய பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ يَدْعُو بِهَا، فَأُرِيدُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي، شَفَاعَةً لِأُمَّتِي فِي الْآخِرَةِ»


Next Page » « Previous Page