Author: Abdul Hakkim

Tirmidhi-2188

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கலகம் செய்வோரின் பண்புகள்.

2188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.

நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.


«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»


Hakim-4866

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4866. ஸுலைமான் பின் அபான் என்பவர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்ர் போருக்குப் புறப்பட்டபோது, ஸஃத் பின் கைஸமா (ரலி) அவர்களும், அவரது தந்தை கைஸமா (ரலி) அவர்களும் (போரில்) கலந்துகொள்ள விரும்பினர். இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் இருவரில் ஒருவர் மட்டும் போரில் கலந்துகொள்ளலாம்; எனவே இருவரும் சீட்டுக் குலுக்கி பாருங்கள் என்று கட்டளையிட்டார்கள்.

அப்போது கைஸமா பின் ஹாரிஸ் (ரலி) தம் மகன் ஸஃத் (ரலி) அவர்களிடம், “நம்மில் ஒருவர் தங்கியிருக்க வேண்டியது அவசியம். எனவே, நீர் உம் குடும்பத்தாருடன் தங்கிவிடும்” என்று கூறினார். அதற்கு ஸஃத் (ரலி) அவர்கள், “இது சொர்க்கம் (ஜன்னத்) அல்லாத வேறு ஏதேனும் ஒன்றாக இருந்தால், அதைத் தங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால், இந்தப் போரில் நான் ஷஹீதாவதை எதிர்பார்க்கிறேன்” என்று பதிலளித்தார்.

பின்னர் அவர்கள் சீட்டுக் குலுக்கி பார்த்தனர். அதில் ஸஃத் (ரலி) அவர்களின் பெயர் வந்தது. எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போருக்குச் சென்றார். அங்கு, அம்ர் பின் அப்து வத் என்பவனால் ஸஃத் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى بَدْرٍ أَرَادَ سَعْدَ بْنَ خَيْثَمَةَ وَأَبُوهُ جَمِيعًا الْخُرُوجَ مَعَهُ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ يَخْرُجَ أَحَدُهُمَا فَاسْتَهَمَا» ، فَقَالَ خَيْثَمَةُ بْنُ الْحَارِثِ لِابْنِهِ سَعْدٍ: إِنَّهُ لَا بُدَّ لِأَحَدِنَا مِنْ أَنْ يُقِيمَ فَأَقِمْ مَعَ نِسَائِكَ، فَقَالَ سَعْدٌ: لَوْ كَانَ غَيْرُ الْجَنَّةِ لَآثَرْتُكَ بِهِ أَنِّي أَرْجُو الشَّهَادَةَ فِي وَجْهِي هَذَا، فَاسْتَهَمَا فَخَرَجَ سَهْمُ سَعْدٍ فَخَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَدْرٍ، فَقَتَلَهُ عَمْرُو بْنُ عَبْدِ وَدٍّ


Musannaf-Abdur-Razzaq-6362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6362.


أَنَّ ابْنَ عَبَّاسٍ كَانَ يَرْفَعُ يَدَيْهِ فِي التَّكْبِيرَةِ الْأُولَى، ثُمَّ لَا يَرْفَعُ بَعْدُ، وَكَانَ يُكَبِّرُ أَرْبَعًا “،


Tirmidhi-1077

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1077.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبَّرَ عَلَى جَنَازَةٍ، فَرَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ، وَوَضَعَ اليُمْنَى عَلَى اليُسْرَى».


Kubra-Bayhaqi-6993

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

6993.


أَنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى كُلِّ تَكْبِيرَةٍ مِنْ تَكْبِيرِ الْجِنَازَةِ، وَإِذَا قَامَ بَيْنَ الرَّكْعَتَيْنِ يَعْنِي فِي الْمَكْتُوبَةِ،


Daraqutni-1832

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறந்தவரின்) ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீரின் போது கைகளை உயர்துவார்கள். பிறகு (மீதமுள்ள தக்பீர்களில்) கைகளை உயர்த்தமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى الْجِنَازَةِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَا يَعُودُ»


Shuabul-Iman-6594

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6594.


أَنَّ رَجُلًا، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا الْإِيمَانُ؟ قَالَ: ” إِذَا سَاءَتْكَ سَيِّئَاتُكَ، وَسَرَّتْكَ حَسَنَاتُكَ، فَأَنْتَ مُؤْمِنٌ ” قَالَ: فَمَا الْإِثْمُ؟ قَالَ: ” إِذَا حَلَّ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ “


Shuabul-Iman-5362

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5362.


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا الْإِيمَانُ؟ قَالَ: ” إِذَا سَاءَتْكَ سَيِّئَاتُكَ وَسَرَّتْكَ حَسَنَاتُكَ، فَأَنْتَ مُؤْمِنٌ ” قَالَ: فَمَا الْإِثْمُ؟ قَالَ: ” إِذَا حَكَّ فِي صَدْرِكَ شَيْءٌ، فَدَعْهُ “

وَفِي رِوَايَةِ مُسْلِمٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، مَا الْإِيمَانُ؟ قَالَ: ” إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ، فَأَنْتَ مُؤْمِنٌ ” قَالَ: يَا رَسُولَ اللهِ، مَا الْإِثْمُ؟ قَالَ: ” إِذَا حَكَّ فِي صَدْرِكَ شَيْءٌ، فَدَعْهُ “


Next Page » « Previous Page