Author: kovai Imran

Tirmidhi-957

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹஜ்ஜுல் அக்பர் நாள் குறித்து கேள்வி கேட்டேன், அது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளாகும் என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.


قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ يَوْمِ الْحَجِّ الأَكْبَرِ فَقَالَ ‏ “‏ يَوْمُ النَّحْرِ ‏”‏ ‏


Tirmidhi-958

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

ஹஜ்ஜுல் அக்பர் நாள் என்பது ‘யவ்முன் நஹ்ருடைய’ (துல்ஹஜ் பத்தாம்) நாளாகும்.


قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ


Tirmidhi-962

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இஹ்ராம்’ நிலையில் இருந்த போது நறுமணம் கலக்காத ஆலிவ் எண்ணையை (தமது தலையில்) தேய்ப்பார்கள்.


أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَدَّهِنُ بِالزَّيْتِ وَهُوَ مُحْرِمٌ غَيْرَ الْمُقَتَّتِ


Tirmidhi-433

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

398 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவிலும் பகலிலும் பத்து ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுததை நான் நினைவில் வைத்துள்ளேன். அவை: ‘லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு, மகரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரக்அத்கள். ‘இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என  ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.


حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ ‏.‏ قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ


Tirmidhi-123

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 91

குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை.

123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்துச் சூடேற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களை என்னோடு அணைத்து கொள்வேன். அப்போது நான் குளித்திருக்க மாட்டேன்.


رُبَّمَا اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِي فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ‏”‏


Tirmidhi-964

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம் : 116

அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து வைத்துள்ள ஏதேனும் ஒரு செய்தியை எனக்கு கூறுங்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாளில் (யவ்முத் தர்வியா) எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என கேட்டேன்.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ” மினாவில் (தொழுதார்கள்) என பதிலளித்தார்கள். நான், “(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 ஆவது) நாளில் (யவ்முந் நஃப்ர்) எங்கு அவர்கள் அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் என்று பதிலளித்து விட்டு, பிறகு உன்னுடைய (ஹஜ் குழுவின்) தலைவர்கள் செய்வதைப் போன்று செய்துகொள்” என்றும் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்::

இது ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இது சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் யூசுஃப் அல்அஸ்ரக் (ரஹ்)வழியாக மட்டுமே ஃகரீபாக அறிவிக்கப்படுகிறது.


أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى ‏.‏ قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ ‏.‏ ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ ‏