தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2792

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 காலையும் மாலையும் சிறிது நேரம் இறைவழியில் (போரிடப்) புறப்படுவதின் சிறப்பும், சொர்க்கத்தில் ஒரு முழம் அளவு இடத்தின் சிறப்பும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும், அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும்.
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 56

(புகாரி: 2792)

بَابُ الغَدْوَةِ وَالرَّوْحَةِ فِي سَبِيلِ اللَّهِ، وَقَابِ قَوْسِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.