தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3221

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஷிஹாப் (ரஹ்) அறிவித்தார்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அஸர் தொழுகையைச் சிறிது பிற்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா (ரஹ்), ‘உண்மையில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸரை) இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்’ என்றார்கள். அதற்கு உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்), ‘நீங்கள் சொல்வதைச் சிந்தித்துச் சொல்லுங்கள், உர்வா!’ என்றார்கள்.

உடனே உர்வா (ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்’ என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ என்று தம் தந்தை அபூ மஸ்வூத் (ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத் (ரஹ்) சொல்ல செவியுற்றேன்’ என்றார்கள்.
Book :59

(புகாரி: 3221)

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَخَّرَ العَصْرَ شَيْئًا، فَقَالَ لَهُ عُرْوَةُ: أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ قَالَ: سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ





மேலும் பார்க்க: புகாரி-521 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.