ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் உள்ள இறை வசனத்திற்கு சுஜூது (சிர வணக்கம்) செய்வது, கட்டாயம் செய்யப்பட வேண்டிய(வை என்று கட்டளையிடப்பட்டுள்ள) சுஜூதுகளில் ஒன்றல்ல. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (திருக்குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன்.
Book :60
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«لَيْسَ ص مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»
அஸ்ஸலாமு அலைக்கும்.
// நபி(ஸல்) அவர்கள் (சூரத்து ஸாதின்) அந்த இடத்தில் (திருக்குர்ஆன் 38:24) சுஜூது செய்வதை பார்த்திருக்கிறேன். //
இந்த (புகாரி: 3422 -வது) ஹதீசிலும் 38:24 என்று அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளீர்கள். ஆனால் ஹதீஸ் மூலத்தில் இவ்வாறு வசன எண் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவில்லையே? 24 – வது வசனம்தான் எதை வைத்து முடிவு செய்யப்பட்டுள்ளது?
வ அலைக்கும் ஸலாம். இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபியின் செயலை விளக்கமாக கூறியுள்ளார்.
பார்க்க: புகாரி-4807.