அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) ‘அந்நஜ்ம்’ என்னும் (56-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர (நபி – ஸல் அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்யாதவர்கள் எவரும் இருக்கவில்லை.
அந்த மனிதன் (தரையில் சிரம் பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன் மீது சஜ்தா செய்து, ‘இது எனக்குப் போதும்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கண்டேன். பின்னால், அவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாகக் கொல்லப்பட்டதையும் பார்த்தேன்.
அத்தியாயம்: 63
(புகாரி: 3853)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ فَسَجَدَ، فَمَا بَقِيَ أَحَدٌ إِلَّا سَجَدَ، إِلَّا رَجُلٌ رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ حَصًا فَرَفَعَهُ فَسَجَدَ عَلَيْهِ، وَقَالَ: هَذَا يَكْفِينِي، فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا بِاللَّهِ
Bukhari-Tamil-3853.
Bukhari-TamilMisc-3853.
Bukhari-Shamila-3853.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த புகாரி 3853 – வது ஹதீஸிலும், புகாரி 4862, 4863 – வது ஹதீஸ்களிலும் ‘அந்நஜ்மு’ என்ற வார்த்தைக்கு பதிலாக
‘அந்நஜ்கி’ என்று தவறாக பதிவாகியுள்ளது. மாற்றிக் கொள்ளுங்கள்
வ அலைக்கும் ஸலாம். ஜஸாகல்லாஹு கைரா. பிழை திருத்தப்பட்டது. கேள்விக்குரிய பதிலை இன்ஷா அல்லாஹ் குறிப்பிடுகிறோம்.