தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5563

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளில் தொழுதுவிட்டு, ‘நம்முடைய தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடித்துத்) திரும்பும் வரை (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்’ என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்க முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ‘என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் ஷஅபீ (ரஹ்), ‘அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவரின் இரண்டு குர்பானிகளில் சிறந்ததாகும்’ எனக் கூறுகிறார்கள்.

Book :73

(புகாரி: 5563)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنِ البَرَاءِ، قَالَ

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، فَلاَ يَذْبَحْ حَتَّى يَنْصَرِفَ» فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَعَلْتُ. فَقَالَ: «هُوَ شَيْءٌ عَجَّلْتَهُ» قَالَ: فَإِنَّ عِنْدِي جَذَعَةً هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّتَيْنِ، آذْبَحُهَا؟ قَالَ: «نَعَمْ، ثُمَّ لاَ تَجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ» قَالَ عَامِرٌ: هِيَ خَيْرُ نَسِيكَتَيْهِ





மேலும் பார்க்க: புகாரி-5556 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.