தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5763

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 47

சூனியம் அல்லாஹ் கூறுகின்றான்:

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள். ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை. (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை. பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே மறுத்தனர். “நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. எனவே கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள். “இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா? (2:102)

அல்லாஹ் கூறுகின்றான்: சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் (20:69).

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின் பக்கம் வருகிறீர்களா? (21:3).

அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது (20:66). அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! கூறுக:) இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புக் கோருகிறேன்) (113:4). இவ்வசனத்திலுள்ள ஊதும் பெண்கள்’ (நஃப்பாஸாத்) என்பது சூனியக்காரிகளைக் குறிக்கும். (23:89ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) துஸ்ஹரூன்’ எனும் சொல்லுக்குக் கண்மூடியவர்களாக’என்று பொருள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ‘பனூஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ‘ஒரு நாள்’ அல்லது ‘ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், ‘இந்த மனிதரின் நோய் என்ன?’ என்று கேட்டார். அத்தோழர், ‘இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று சொல்ல, முதலாமவர் ‘இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?’ என்று கேட்டார். தோழர், ‘லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)’ என்று பதிலளித்தார். அவர், ‘எதில் வைத்திருக்கிறான்?’ என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்’ என்று பதிலளித்தார். அவர், ‘அது எங்கே இருக்கிறது?’ என்று கேட்க, மற்றவர், ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்’ என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ‘ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன’ என்று கூறினார்கள்.

நான், ‘இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)’ என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. 89

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) ‘சீப்பிலும் சணல் நாரிலும்’ என்று காணப்படுகிறது. தலையை வாரும்போது கழியும் முடிக்கே ‘முஷாதத்’ (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும்போது வெளிவரும் நாருக்கே ‘முஷாகத்’ (சணல் நார்) எனப்படும்.

Book : 76

(புகாரி: 5763)

بَابُ السِّحْرِ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى المَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولاَ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلاَ تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ المَرْءِ وَزَوْجِهِ، وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ، وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلاَ يَنْفَعُهُمْ، وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاَقٍ} [البقرة: 102] وَقَوْلِهِ تَعَالَى: {وَلاَ يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى} [طه: 69] وَقَوْلِهِ: {أَفَتَأْتُونَ السِّحْرَ وَأَنْتُمْ تُبْصِرُونَ} [الأنبياء: 3] وَقَوْلِهِ: {يُخَيَّلُ إِلَيْهِ مِنْ سِحْرِهِمْ أَنَّهَا تَسْعَى} [طه: 66] وَقَوْلِهِ: {وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي العُقَدِ} [الفلق: 4] وَالنَّفَّاثَاتُ: السَّوَاحِرُ، {تُسْحَرُونَ} [المؤمنون: 89]: تُعَمَّوْنَ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ

سَحَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ، يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ، حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ كَانَ يَفْعَلُ الشَّيْءَ وَمَا فَعَلَهُ، حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ وَهُوَ عِنْدِي، لَكِنَّهُ دَعَا وَدَعَا، ثُمَّ قَالَ: ” يَا عَائِشَةُ، أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ، أَتَانِي رَجُلاَنِ، فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي، وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ، فَقَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: مَا وَجَعُ الرَّجُلِ؟ فَقَالَ: مَطْبُوبٌ، قَالَ: مَنْ طَبَّهُ؟ قَالَ: لَبِيدُ بْنُ الأَعْصَمِ، قَالَ: فِي أَيِّ شَيْءٍ؟ قَالَ: فِي مُشْطٍ وَمُشَاطَةٍ، وَجُفِّ طَلْعِ نَخْلَةٍ ذَكَرٍ. قَالَ: وَأَيْنَ هُوَ؟ قَالَ: فِي بِئْرِ ذَرْوَانَ ” فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، فَجَاءَ فَقَالَ: «يَا عَائِشَةُ، كَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الحِنَّاءِ، أَوْ كَأَنَّ رُءُوسَ نَخْلِهَا رُءُوسُ الشَّيَاطِينِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ: أَفَلاَ اسْتَخْرَجْتَهُ؟ قَالَ: «قَدْ عَافَانِي اللَّهُ، فَكَرِهْتُ أَنْ أُثَوِّرَ عَلَى النَّاسِ فِيهِ شَرًّا» فَأَمَرَ بِهَا فَدُفِنَتْ تَابَعَهُ أَبُو أُسَامَةَ، وَأَبُو ضَمْرَةَ، وَابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ هِشَامٍ، وَقَالَ: اللَّيْثُ، وَابْنُ عُيَيْنَةَ، عَنْ هِشَامٍ: «فِي مُشْطٍ وَمُشَاقَةٍ» يُقَالُ: المُشَاطَةُ: مَا يَخْرُجُ مِنَ الشَّعَرِ إِذَا مُشِطَ، وَالمُشَاقَةُ: مِنْ مُشَاقَةِ الكَتَّانِ



5 comments on Bukhari-5763

  1. ⁠✷https://youtube.com/shorts/ERo8-pAMZac?si=sooYUNhClYBqeHkJ

    ⁠✷பிஜேயும் மௌலவி இப்னு ரசீனும ஹாரூத் மாரூத் மலக்கல்ல என்று மறுக்கிறார்கள்.

    ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் வழக்கத்திற்கு மாறான நேரத்தில் வந்தார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “ஜிப்ரீலே! உங்கள் நிறம் மாறியதைப் பார்க்கிறேன், ஏன்?” என்று கேட்டார்கள். ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்: “அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) நரகத்தின் சாவிகளை ஒப்படைக்க உத்தரவிட்டபடியால் நான் உங்களிடம் வந்திருக்கிறேன்.” நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “ஜிப்ரீலே! நரகத்தைப் பற்றி விவரித்து, ஜஹன்னமைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”

    ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்: “அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) ஜஹன்னமைப் பற்றி உத்தரவிட்டார். அது ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டது, வெண்மையானது. பின்னர் மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டது, சிவப்பானது. பின்னர் மீண்டும் ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டது, கருப்பானது. அது கரும் நிறமானது, இருளடைந்தது. அதன் பொறிகள் ஒளிர்வதில்லை, அதன் சுடர் அணைக்கப்படுவதில்லை. உம்மை சத்தியத்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! ஜஹன்னத்தின் ஊசித்துளை அளவு திறந்தாலும், பூமியிலுள்ள அனைவரும் அதன் வெப்பத்தால் இறந்துவிடுவார்கள். உம்மை சத்தியத்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! நரகத்தின் துணியில் ஒரு துண்டு வானத்திற்கும் பூமிக்கும் இடையில் தொங்கவிடப்பட்டால், பூமியிலுள்ள அனைவரும் அதன் வெப்பத்தால் இறந்துவிடுவார்கள். உம்மை சத்தியத்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! நரகத்தின் காவலர்களில் ஒருவர் உலக மக்களிடம் வந்து, அவர்கள் அவரைப் பார்த்தால், அவரது முகத்தின் அருவருப்பாலும், அவரது துர்நாற்றத்தாலும் பூமியிலுள்ள அனைவரும் இறந்துவிடுவார்கள். உம்மை சத்தியத்துடன் அனுப்பியவன்மீது சத்தியமாக! நரகவாசிகளின் சங்கிலியின் ஒரு வளையம் அல்லாஹ் தன் கிட்டத்தில் விவரித்துள்ளபடி, உலகின் மலைகளின் மீது வைக்கப்பட்டால், அவை உடைந்து, பூமியின் அடித்தளத்தை அடையும் வரை ஒன்றிணைந்துவிடும்.”

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜிப்ரீலே! போதும். என் இதயம் பிளந்துவிடும், நான் இறந்துவிடுவேன்.” பின்னர் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்தார்கள், அவர் அழுதுகொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “ஜிப்ரீலே! நீங்கள் அழுகிறீர்களா? நீங்கள் அல்லாஹ்விடம் உயர்ந்த நிலையில் இருக்கிறீர்களே!” ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்: “நான் ஏன் அழக்கூடாது? நான் அழுவதற்கு மிகவும் தகுதியானவன். அல்லாஹ்வின் அறிவில் நான் எந்த நிலையில் இருக்கிறேனோ எனக்குத் தெரியாது. நான் இப்லீஸ் போல் சோதிக்கப்படலாம். அவன் மலக்குகளில் ஒருவனாக இருந்தான். நான் ஹாரூத் மற்றும் மாரூத் போல் சோதிக்கப்படலாம் என்று எனக்குத் தெரியாது.”

    நபி (ஸல்) அவர்கள் அழுதார்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களும் அழுதார்கள். அவர்கள் இருவரும் அழுதுகொண்டிருக்கும்போது, “ஜிப்ரீலே! முஹம்மதே! அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) உங்கள் இருவரையும் தன்னை மீறாதவர்களாக ஆக்கியுள்ளான்” என்று அழைப்பு வந்தது. ஜிப்ரீல் (அலை) மேலே சென்றார், நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்றார்கள். அன்சாரிகளில் ஒரு குழுவினர் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் சிரிக்கிறீர்களா? உங்களுக்குப் பின்னால் ஜஹன்னம் இருக்கிறது. நான் அறிந்ததை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள், அதிகமாக அழுவீர்கள், உணவு மற்றும் பானத்தை சுவைக்க மாட்டீர்கள், மேடுகளுக்குச் சென்று அல்லாஹ்விடம் மன்றாடுவீர்கள்.”

    பின்னர் அழைப்பு வந்தது: “முஹம்மதே! என் அடியார்களை நம்பிக்கையிழக்கச் செய்யாதே. நான் உன்னை எளிதாக்குபவனாக அனுப்பியுள்ளேன், கடினப்படுத்துபவனாக அனுப்பவில்லை.” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நேராக நடந்து, நெருங்கிச் செல்லுங்கள்.”

    **உமர் பின் அல்-கத்தாப் (ரலி) மூலம்
    **அத்-தபரானி
    ** அல்-முஜம் அல்-அவ்ஸதில் ➖3/89 (பதிவு செய்துள்ளார்கள்)
    ** சுருக்கம்: இந்த ஹதீஸ் உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த இச்னாத் மூலம் மட்டுமே வருகிறது, இது சலாம் மூலம் தனித்துவமானது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.