தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-736

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84 ஆரம்பத் தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும் போதும், (ருகூவிலிருந்து) உயரும் போதும் இருகைகளையும் உயர்த்துவது. 

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தம் தோள் புஜங்களுக்கு நேராக இரண்டு கைகளையும் உயர்த்துவதை பார்த்திருக்கிறேன். ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறேன். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்றும் அப்போது கூறுவார்கள். ஸஜ்தாவின்போது இவ்வாறு செய்யமாட்டார்கள்.
Book : 10

(புகாரி: 736)

بَابُ رَفْعِ اليَدَيْنِ إِذَا كَبَّرَ وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ فِي الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ، وَيَفْعَلُ ذَلِكَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَيَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، وَلاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ





மேலும் பார்க்க: புகாரி-735 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.