தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7550

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53 குர்ஆனில் (உங்களுக்கு) எது சுலபமானதோ அதை ஓதிக்கொள்ளுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனம்.

 உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்கள் அல்ஃபுர்கான் எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். நான் அவரின் ஓதலை செவிதாழ்த்திக் கேட்டபோது, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக் கொண்டிருந்தார். எனவே, தொழுகையில் வைத்தே அவரைத் தண்டிக்க நான் முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுது முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுமையாயிருந்தேன். (அவர் சலாம் கொடுத்தவுடன்) அவரின் மேல்துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து ‘நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காட்டியது யார்?’ என்று கேட்டேன். அவர், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் எனக்கு இதை ஓதிக் காட்டினார்கள்’ என்றார். நான் ‘நீர் சொல்வது பொய். நீர் ஓதியதற்கு மாறாகவே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டினார்கள்’ என்று சொல்லி, அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன்.

‘இவர் அல்ஃபுர்கான் அத்தியாயத்தை தாங்கள் எனக்கு ஓதிக் காட்டாத வேறு முறைகளின்படி ஓதுவதை செவியுற்றேன்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவரை வடுங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘ஹிஷாமே! ஓதுங்கள்!’ என்றார்கள்.

நான் செவியுற்ற அதே முறைப்படி அவர் ஓதினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இவ்வாறுதான் இந்த அருளப்பெற்ற’ என்று கூறிவிட்டு ‘உமரே! நீங்கள் ஓதுங்கள்!’ என்றார்கள். நானும் நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டியபடி ஓதினேன்.

அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வாறுதான் இது அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைப்படி அருளப்பெற்றது. எனவே, இதிலிருந்து உங்களுக்கு சுலபமானது எதுவோ அதை ஓதிக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.190

Book : 97

(புகாரி: 7550)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ القُرْآنِ}

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ المِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدٍ القَارِيَّ، حَدَّثَاهُ أَنَّهُمَا سَمِعَا عُمَرَ بْنَ الخَطَّابِ، يَقُولُ

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: كَذَبْتَ، أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ، فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ: «أَرْسِلْهُ، اقْرَأْ يَا هِشَامُ»، فَقَرَأَ القِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَلِكَ أُنْزِلَتْ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا عُمَرُ»، فَقَرَأْتُ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ: «كَذَلِكَ أُنْزِلَتْ إِنَّ هَذَا القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.