ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
6556. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரின் (உடல்) ஆரோக்கியத்தையும், பலத்தையும் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
எனவே அவரிடம், “எப்போதாவது உமக்கு உம்மு மில்தம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் உம்மு மில்தம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் என்று பதிலளித்தார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு எப்போதாவது தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் இரு நெற்றிப்பொட்டிலும், தலையிலும் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ فَأَعْجَبَهُ صِحَّتُهُ وَجَلَدُهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَتَى أَحْسَسْتَ أُمَّ مِلْدَمٍ؟»، فَقَالَ الْأَعْرَابِيُّ: وَأَيُّ شَيْءٍ أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «الْحُمَّى»، قَالَ: وَأَيُّ شَيْءٍ الْحُمَّى؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُخْنَةٌ تَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعَظْمِ»، فَقَالَ الْأَعْرَابِيُّ: مَا لِي بِذَلِكَ عَهْدٌ، قَالَ لَهُ: «فَمَتَى أَحْسَسْتَ بِالصُّدَاعِ؟»، قَالَ: وَأَيُّ شَيْءٍ الصُّدَاعُ؟ فَقَالَ لَهُ: «ضَرَبَانٌ يَكُونُ فِي الصُّدْغَيْنِ وَالرَّأْسِ»، فَقَالَ: مَا لِي بِذَلِكَ عَهْدٌ، قَالَ: فَلَمَّا وَلَّى الْأَعْرَابِيُّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ، فَلْيَنْظُرْ إِلَيْهِ»، يَعْنِي الْأَعْرَابِيَّ
சமீப விமர்சனங்கள்